அமெரிக்கா: மைக்ரோசாப்ட் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா நிறுவனத்தில் தனக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஊதிய மட்டுமல்லாது அவருக்கு என கணிசமான ஈக்விட்டி பங்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவர் தன் வசம் இருந்த குறிப்பிட்ட சில பங்குகளை விற்பனை செய்திருப்பது ஒரு முதலீட்டு இணையதளம் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி அவர் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

சத்ய நாதெல்லா சுமார் 7,199 ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். ஒரு பங்கின் மதிப்பு 417 டாலர்கள் என்ற மதிப்பீட்டில் சத்தியநாநெல்லா விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக அவர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்துள்ளார். மல்டிபிள் ட்ரேட் என்ற நடைமுறையின் கீழ் அவரது பங்குகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் SEC இல் ஆவணத்தை தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக இது போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஈக்விட்டி பங்குகளில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வந்தால், அதனை பொதுவெளியில் அறிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அமெரிக்காவை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஆகும். ஒரு நிறுவனத்தில் 5% மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடிய அதிகாரிகள் அதனை விற்பனை செய்தாலோ அல்லது அதிகப்படுத்தினாலோ அரசிடம் தெரிவிக்க வேண்டும் என விதிமுறை கொண்டுள்ளது.
அதன்படி சத்ய நாதெல்லா தன்னுடைய பங்குகளை விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த விற்பனையை தொடர்ந்து தற்போது சத்ய நாதெல்லா வசம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திம் 7,86,000 பங்குகள் இருக்கின்றன. இந்த பங்கு விற்பனையின் மூலம் தனக்கு எந்த ஒரு பெனிபீஷியல் ஓனர்ஷிப்பும் கிடைக்கவில்லை என்பதையும் சத்ய நாதெல்லா அறிவித்துள்ளார்.
இது போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய உயர் பதவியில் இருக்கக்கூடிய நபர்கள் கணிசமான அளவு பங்குகளை விற்பனை செய்வது அல்லது வாங்குவது போன்ற நடவடிக்கைகள் அந்த நிறுவன பங்கின் மீது பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே இத்தகைய விஷயங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. சத்ய நாதெல்லாவின் தற்போதைய சொத்து மதிப்பு 7500 கோடி ரூபாய் ஆகும்.
Story Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications