திடீரென 50% மைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சமீபத்தில் தன்னிடம் இருந்து டெஸ்லா பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்தது முதலீட்டுச் சந்தையிலும், சக நிறுவனத் தலைவர்கள் மத்தியிலும் பெரும் விவாத பொருளானது மறக்க முடியாது.

இந்த நிலையில் தற்போது உலகிலேயே மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா கையில் இருந்து மைக்ரோசாப்ட் பங்குகளில் 50 சதவீதத்தை விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

கூகுள் முதல் ட்விட்டர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் தான்.. புகழ்ந்து தள்ளிய எலான் மஸ்க்..! கூகுள் முதல் ட்விட்டர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் தான்.. புகழ்ந்து தள்ளிய எலான் மஸ்க்..!

 சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய பின்பு சத்ய நாடெல்லா தலைமையில் மிகப்பெரிய வளர்ச்சியை மைக்ரோசாப்ட் பதிவு செய்துள்ளது. புதிய துறையில் வர்த்தக விரிவாக்கம், புதிதாக நிறுவன கைப்பற்றல், அரசு ஒப்பந்தங்கள், கிளவுட் சேவையில் பெரிய அளவிலான வளர்ச்சி எனப் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

 மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா தன்னிடம் இருந்த மைக்ரோசாப்ட் பங்கு இருப்பில் சுமார் 50 சதவீத பங்குகளை நவம்பர் 22 முதல் 24 வரையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் சத்ய நாடெல்லா 8,39,000 பங்குகளைச் சராசரியாக 342 டாலருக்கு விற்பனை செய்து மொத்தம் 287 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியுள்ளார்.

 8.4 லட்சம் பங்குகள் விற்பனை

8.4 லட்சம் பங்குகள் விற்பனை

இதுகுறித்து மைக்ரோசாப்ட் சிஇஓ-வான சத்ய நாடெல்லா-வின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் நவம்பர் 22 முதல் 24 வரையில் சத்ய நாடெல்லா 8.4 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். தனது சொந்த நிதியியல் நிதி விஷயங்களுக்காகவும், பணத்தை
பல்வகைப்படுத்தவும் முடிவு செய்து 287 மில்லியன் டாலர் தொகையைத் திரட்டியுள்ளார்.

 பங்கு இருப்பு அளவு

பங்கு இருப்பு அளவு

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரைக்கும் பங்கு இருப்பு அளவை சத்ய நாடெல்லா தாண்டியுள்ள காரணத்தாலும் இந்தப் பங்கு விற்பனை முக்கியமானது எனக் கருதி 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

 சத்ய நாடெல்லா கையிருப்பு

சத்ய நாடெல்லா கையிருப்பு

சத்ய நாடெல்லா ஒவ்வொரு ஆண்டும் தனது பங்கு இருப்பில் சிறு பகுதியை முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விற்பனை செய்வது வழக்கம், ஆனால் தற்போது 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சத்ய நாடெல்லா இந்தப் பங்கு விற்பனைக்குப் பின்பும் 8,31,000 பங்குகளை வைத்துள்ளார்.

 மைக்ரோசாப்ட் உயர் அதிகாரிகள்

மைக்ரோசாப்ட் உயர் அதிகாரிகள்

சத்ய நாடெல்லா மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்களான பிராட் ஸ்மித், ஜட்சன் அல்தாஃப் ஆகியோரும் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது 2.5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டு உடன் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது.

 புதிய வரி

புதிய வரி

மேலும் அமெரிக்காவில் தற்போது 2,50,000 டாலருக்கு அதிக மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் போது long-term capital gains tax ஆகச் சுமார் 7 சதவீத வரியை வருகிற ஜனவரி 1, 2022 முதல் வாஷிங்டன் மாநில அரசு விதிக்க உள்ளது. இதற்காகப் பல நிறுவனத் தலைவர்கள் அடுத்தடுத்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Satya Nadella sells half his stake in Microsoft for $287 million

Satya Nadella sells half his stake in Microsoft for $287 million
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X