சவுதி அரேபியா எடுத்த திடீர் முடிவு.. கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சம்.. இந்தியாவின் நிலைமை என்ன..?

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக இருக்கும் சவுதி அரேபியா சில மாதங்களுக்கு முன்பு எண்ணெய் விலையை உயர்த்தி அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பார்க்கும் திட்டதுடன் தானாக முன்வந்து ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் பேரல் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்தது.

இந்த உற்பத்தி குறைப்பை சவுதி அரேபியா ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டுமே அறிவித்திருந்த நிலையில் வியாழக்கிழமை அடுத்த ஒரு மாதத்திற்கு அதாவது செப்டம்பர் மாதத்திற்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த ஒரு மில்லியன் பேரல் உற்பத்தியை குறைப்பு தொடரவும் வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா எடுத்த திடீர் முடிவு.. கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சம்.. இந்தியாவின் நிலைமை என்ன..?

இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளுக்கு சுமார் 9 மில்லியன் பேரலாக இருக்கும் என்று சவுதி எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு அறிவித்துள்ளது அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் SPA.

OPEC + நாடுகள் அறிவித்துள்ள இந்த கூடுதல் தன்னார்வ உற்பத்தி குறைப்பு அறிவிப்புகள் எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறப்படுகிரது. ஆனால் இந்த உற்பத்தி குறைப்பால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது என்பது தான் முக்கியமான விஷயம்.

சவுதி அரேபியா எடுத்த திடீர் முடிவு.. கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சம்.. இந்தியாவின் நிலைமை என்ன..?

இந்த நிலையில் சவுதி அரேபிய அரசின் வியாழக்கிழமை அறிவிப்பில் ஒரு நாளுக்கு 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைத்துள்ள நடவடிக்கை தொடர்ந்து நீட்டப்படலாம், அல்லது நீட்டிக்கப்பட்டும் அதிகரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.

செப்டம்பர் மாதம் ரஷ்யாவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை 300,000 பேரல் குறைக்கும் என்று சவூதியின் அறிவிப்புக்குப் பின் ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறியுள்ளார். இது இந்தியாவை கூடுதலாக பாதிக்கும், இதன் மூலம் இந்தியா மீண்டும் சவுதி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தனது கொள்முதல்-ஐ அதிகரிக்க துவங்கும் நிலைக்கு தள்ளும்

சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை-ஐ கட்டியாளும் OPEC+ அமைப்பின் ஜூன் மாத உற்பத்தி கொள்கை கூட்டத்தில் 2024 க்குள் எண்ணெய் கட்டுப்படுத்த ஒரு பரந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் படிப்படியாக சவுதி, ரஷ்யா தனது உற்பத்தியை குறைத்து வருகிறது.

சவுதி அரேபியா எடுத்த திடீர் முடிவு.. கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சம்.. இந்தியாவின் நிலைமை என்ன..?

OPEC மற்றும் ரஷ்யா தலைமையிலான நட்பு நாடுகளை உள்ளடக்கிய OPEC+ அமைப்புகளின் முக்கிய கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது. OPEC+ அமைப்பில் இருக்கும் நாடுகள் தான் சர்வதேச சந்தையில் சுமார் 40 சதவீத கச்சா எண்ணெய் சப்ளையை செய்கிறது, இப்படியிருக்கையில் 2022 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டு சப்ளை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதற்கான சிறிய நம்பிக்கையும் தகர்ந்துள்ளது. இன்று அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.25 சதவீதம் உயர்ந்து 81.75 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவீதம் அதிகரித்து 85.27 டாலராகவும், OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 0.07 சதவீதம் அதிகரித்து 86.66 டாலராக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+