இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் ஆக்சிஜனுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி, பாகிஸ்தான், அமெரிக்கா தொடர்ந்து இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சவுதி அரேபியா இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.
80 டன் திரவ ஆக்சிஜன்
இந்நிலையில் இந்தியாவில் ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் சுமார் 80 டன் திரவு ஆக்சிஜனை இந்தியாவிற்கு அளித்துள்ளது.
ஏற்றுமதி செய்யும் அதானி
இந்த 80 டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு அதானி மற்றும் லைன்டே ஆகிய இரு நிறுவனங்கள் உடன் இணைந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், சவுதி அரேபியாவின் இந்திய தூதரகம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளிடம் உதவி
இந்தியாவில் நாளுக்கு நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு உலக நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற துவங்கியுள்ளது. ஆக்சிஜென் உற்பத்தி டிரக்குகள், திரவ ஆக்சிஜன் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிடம் கொரோனா வேக்சினுக்கான கோரிக்கையும் வைத்துள்ளது.
7,100 டன் ஆக்சிஜன் தயாரிப்புத் தளம்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உட்படத் தினமும் 7,100 டன் ஆக்சிஜன் தயாரிக்கும் தளம் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று மற்றும் போக்குவரத்து பிரச்சனையின் காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.
ஆக்சிஜன் போக்குவரத்தில் சிக்கல்
ஆக்சிஜன் போக்குவரத்தை எளிதாக்க ஆக்சிஜன் டேக்குகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு ஆர்கன் மற்றும் நைட்ரஜன் வாயுவை போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் டிரக்குகளை ஆக்சிஜன் போக்குவரத்து செய்யும் வகையில் மாற்ற உத்தரவிட்டுள்ளது.
மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்கு
மேலும் மத்திய அரசு ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திச் செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து சுமார் 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இது அதிகம் பாதிப்பு நிறைந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதன் மூலம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications