ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) செப்டம்பர் காலாண்டு முடிவினை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியான நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 74% அதிகரித்து, 13,265 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே செப்டம்பர் காலாண்டில் செயல்பாட்டு லாபம் 12.82% அதிகரித்து, 21,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 12.83% அதிகரித்து, 35,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 31,184 கோடி ரூபாயாக இருந்தது. இதே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 31,196 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டெபாசிட் விகிதம்
செப்டம்பர் காலாண்டு முடிவில் இதன் டெபாசிட் விகிதம் 41,90,255 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 10% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 38,09,630 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் மொத்த அட்வான்ஸ் தொகையானது 30,35,071 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 25,30,777 கோடி ரூபாயாக இருந்தது. இதே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 29,00,636 கோடி ரூபாயாக இருந்தது. எஸ்பிஐ-யின் மொத்த அட்வான்ஸ் கடந்த காலாண்டினை காட்டிலும் 4.63% அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ கடன்
எஸ்பிஐ கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 19.93% அறிவித்துள்ளது. உள்நாட்டு அட்வான்ஸ் தொகையானது 18.15% அதிகரித்துள்ளது. இதே முன்னணி வணிக வங்கியான வெளிநாட்டு அலுவலகங்களின் அட்வான்ஸ் வளர்ச்சியானது 30.14% அதிகரித்துள்ளது.
விவசாய கடன் & எஸ் எம் இ
எஸ் எம் இ மற்றும் விவசாய லோன் கடன் வளர்ச்சியானது, முறையே 13.24% மற்றும் 11% வளர்ச்சியானது ஏற்றம் கண்டுள்ளது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் லோன் கடன் வளர்ச்சியானது, 14 - 16% அதிகரித்துள்ளது.
வாரக்கடன் சரிவு
எஸ்பிஐ வங்கியின் மொத்த கடன் புத்தகத்தில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 3.52% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.90% ஆக இருந்தது. ஆக கடந்த ஆண்டினை காட்டிலும் வாரக்கடன் விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.
கடன் வளர்ச்சி
கொரோனாவின் வருகைக்கு பிறகு வங்கி துறைகளானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. மக்களின் தேவை அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சியும் அதிகரித்து வருகின்றது. தற்போது சர்வதேச நாடுகள் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியாவில் பெரியளவில் தாக்கம் இல்லை. இதன் காரணமாக டெபாசிட் விகிதங்கள் அதிரிக்கலாம். இது வங்கிகளில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கலாம்.
பங்கு விலை நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.55% அதிகரித்து, 593.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 596.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 580.40 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.53% அதிகரித்து, 593.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 596.75 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 580.60 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 596.75 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 269.55 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications