நம்ம ஊர் இளைஞர்களுக்கு பேங்கிங் மற்றும் ஐடி துறையில் அவ்வளவு ஆர்வம். நீங்களும் பேங்கிங் வேலையைத் தேடிக் கொண்டிருப்பவராக இருந்தால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஒரு சில தினங்களுக்கு முன்னர் எஸ்பிஐ வங்கியில் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பின் காலக்கெடுவை அனைவரும் பயன்பெரும் வகையில் வங்கி நீட்டித்திருக்கிறது. இதுவரையில் விண்ணப்பிக்க தவறியவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SBI பேங்க்கிற்கு இந்தியா முழுவதிலும் 7,150 அப்ரண்டிஸ் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமத்துவதற்காக மே 19-ஆம் தேதி SBI அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஜூன் 8-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக கடைசி தேதியை ஜூன் 15-ஆம் தேதி வரை எஸ்பிஐ பேங்க் நீடித்துள்ளது. இன்றிலிருந்து இன்னும் தோராயமாக ஒரு வார கால அவகாசம் இருப்பதால் வேலை தேடுபவர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடைசி நேர தொழில்நுட்ப பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக முன்கூட்டியே விண்ணப்பிக்கவும் எஸ்பிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் "SBI கரியர் போர்டல்" மூலமாக அப்ளை செய்யலாம்.

நீங்கள் ஆன்லைன் மூலமாக உங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். ஜூன் 15-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் விண்ணப்பிப்பது நல்லது. அப்ரண்டீஸ் ப்ரோக்ராமின் காலக்கெடு 1 வருடம். இந்த 1 வருட காலத்திற்கும் உங்களுக்கு ரூ.15,000 ஸ்டைபெண்ட் வழங்கப்படும்.
முதலில் உங்களுக்கு ஒரு எழுத்துத் தேர்வு இருக்கும். அதன் பிறகு உள்ளூர் மொழி தேர்வு. இதில் தகுதி பெற்று விட்டால் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். கல்வி தகுதியை பொருத்தவரையில் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நீங்கள் இளங்களைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க 20 முதல் 28 வயதுடையவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பின்னர் "SBI அப்ரண்டீஸ் ரெக்ரூட்மெண்ட் 2026" அப்ளிகேஷன் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். உங்களுடைய ஈ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொண்டு பதிவு செய்யலாம். பின்னர் அப்ளிகேஷனில் கேட்கப்பட்டிருக்கும் சரியான விபரங்களை வழங்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்களை அப்லோட் செய்து அதற்கான பேமென்ட் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். செயல்முறை முடிந்த பிறகு கன்ஃபர்மேஷன் பேஜ் தெரியவரும். அதை நீங்கள் பிற்கால தேவைக்கு டவுன்லோட் செய்து வைத்திருக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு SBI அறிவிப்பை கவனமாக படித்து விட்டு விண்ணப்பியுங்கள்!


Click it and Unblock the Notifications