ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் NRI வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களுடன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்குகின்றன. SBI பேங்க்-இன் சமீபத்திய திட்டங்களான அம்ரித் கலாஷ் மற்றும் வீ கேர் போன்ற திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
SBI அம்ரித் கலாஷ்: எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டம் 400 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமாகும். இந்தத் திட்டம் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.60% அதிகபட்ச வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டம் செப்டம்பர் 30, 2023 வரை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இது அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான திட்டம் ஆகும். நல்ல வருமானத்துடன் கூடிய பிக்சட் டிபாசிட் திட்டத்தை தேடும் நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

எஸ்பிஐ விகேர் திட்டம்: இந்தத் மூத்தக் குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது இந்த திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும். மூத்த குடிமக்கள் தாங்கள் பிக்சட் டெபாசிட்களில் அதிக வருமானம் பெற நினைத்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.50%.
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி யோஜனா: புதிதாக தொடங்கப்பட்ட எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி யோஜனா என்பது போட்டி வட்டி விகிதங்களை வழங்கும் 444 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டமாகும். இதன் கீழ் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.50% வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் ஆண்டுக்கு 7.75% வட்டி கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் FDக்கு எதிராக கடனையும் பெறலாம். அம்ரித் விருஷ்டியில் முதலீடு செய்வதற்கான கடைசித் தேதி மார்ச் 31, 2025 ஆகும், இது அதிக வருவாய் ஈட்டும் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வங்கிகளும் தங்களுடைய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. மேலும் சில வங்கிகள் புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளனர். சமீபத்தில் வங்கிகளின் கடன் அதிகரித்து டெபாசிட் குறைந்ததாக ஒரு அறிவிப்பு வெளியானது. அதன் பெயரில் பல வங்கிகளும் தங்களுடைய டெபாசிட் அதிகரிக்கும் பொருட்டு தற்போது அதிக வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications