இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து இரவோடு இரவாக இந்தியாவை விட்டுத் தப்பி ஓடிய விஜய் மல்லையா இந்தியாவிற்கு அழைத்துவரவும், உரியத் தண்டனையை வாங்கிக் கொடுக்கவும் மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் விஜய் மல்லையாவிற்குக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் விஜய் மல்லையா சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
கிங்ஃபிஷர் விஜய் மல்லையா
விஜய் மல்லையாவிற்குக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இக்கடன் தொகையை வசூலிக்கும் பணியில் எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு அமைத்து இயங்கி வரும் நிலையில், விஜய் மல்லையாவின் 5,646.54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு
இதற்காக எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறையிடம் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையில் Prevention of Money Laundering Act (PMLA) நிதீமன்றம் கடன் தொகையை ஈடு செய்ய விஜய் மல்லையா சொத்துக்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது.
5,646.54 கோடி ரூபாய் சொத்து விற்பனை
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு அறிவிக்கப்பட்டு உள்ள 5,646.54 கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்து முடித்தால், விஜய் மல்லையா கடன் மோசடி செய்த தொகையில் 91 சதவீத அசல் தொகை அதாவது Principal தொகையைப் பெற முடியும் எனத் தெரிகிறது. இதற்குப் பின் வட்டி தொகை உள்ளது.
யுனைடெட் ப்ரீவரிஸ் பங்குகள்
மேலும் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான யுனைடெட் ப்ரீவரிஸ் நிறுவனத்தில் இருக்கும் 16.165 சதவீத பங்குகளை நடப்பு நிதியாண்டின் முதல் அல்லது 2வது காலாண்டில் பங்குச்சந்தையில் லார்ஜ் பிளாக் டீல் வாயிலாகா விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
5,500 கோடி ரூபாய் மதிப்பிலான யுபி பங்குகள்
5,500 கோடி ரூபாய் மதிப்பிலான யுனைடெட் ப்ரீவரிஸ் நிறுவனத்தின் 16.165 சதவீத பங்குகளை எஸ்பிஐ தலைமையிலான குழு எஸ்பிஐ கேப்பிடல் மூலம் ரீடைல் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.
இதோடு ஏற்கனவே அமலாக்கத் துறை 4.13 கோடி ரூப்ய் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை Debt Recovery Tribunal (DRT) டிமேட் கணக்கிற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications