இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான எஸ்பிஐ மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த காலாண்டில் 18,643 கோடி லாபம் ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைவாகும்.
2025 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான நிதி முடிவுகளை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் என்பது 2.7 சதவீதமாக அதிகரித்து 42,775 கோடி ரூபாயாக இருக்கிறது. அதாவது நிறுவனத்திற்கு கிடைத்த வட்டி வருமானம் மற்றும் நிறுவனம் செலுத்திய வட்டி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் தான் இந்த வருமானம்.

அதே வேளையில் எஸ்பிஐ நிறுவனத்தின் நிகர வட்டி மார்ஜின் என்பது நிலையாக 3.15 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஒரு வங்கியின் லாபத்தை கணக்கிடுவதற்கான முக்கியமான ஒரு குறியீடு இதுவாகும். அந்த வகையில் எஸ்பிஐ நிறுவனத்தின் லாபம் நிலையானதாகவே இருக்கிறது.
அதேவேளையில் நான்காவது காலாண்டில் எஸ்பிஐ நிறுவனத்தில் வழங்கிய கடன்களின் அளவு 12 சதவீதமாகவும், வங்கி பெற்ற டெபாசிட்களின் அளவு 9.5% ஆகவும் உயர்ந்திருக்கிறது. அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ நிறுவனம் கடன் வழங்கிய அளவு 42.21 லட்சம் கோடி ரூபாயாகவும் டெபாசிட் பெற்ற பணத்தின் மதிப்பு 53.82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்ட எஸ்பிஐ தங்களின் முதலீட்டாளர்களுக்கு நற்செய்தியையும் வழங்கியுள்ளது. இதன்படி எஸ்பிஐ நிறுவன பங்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஒரு பங்கிற்கு 15.90 ரூபாய் ஈவு தொகையாக வழங்குவது என முடிவெடுத்திருக்கிறது. ஒரு ரூபாய் முக மதிப்பு கொண்டு பங்கிற்கு 1590 சதவீதம் அதாவது 15.90 ரூபாய் ஈவுத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈவுத்தொகை வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதியாக மே 16ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மே 30ஆம் தேதி இந்த தொகை கணக்கில் வைக்கப்படும்.
வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தையில் எஸ்பிஐ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1.5% உயர்ந்து 800 ரூபாய் என்று அளவில் வர்த்தகமானது. இந்தியாவின் முன்னணி வங்கி சேவை நிறுவனமாக எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எஸ்பிஐ qualified institution placement அல்லது follow on public offer முறையில் 25,000 கோடிகள் வரை திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications