நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அரசுக்கு சொந்தமான மகாநகர் டெலிகாம் நிகாம் (MTNL) நிறுவனத்தை வராக்கடன் ஆக (NPA) அறிவித்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் எம்டிஎன்எல் ஆனது என்பிஏ ஆக அறிவிக்கப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, செப்டம்பர் 30ஆம் தேதியன்று எம்டிஎன்எல்லின் மொத்த நிலுவைத் தொகை ரூ. 325.52 கோடி ஆகும். இதில் ரூ. 281.62 கோடிகள் நிலுவையில் உள்ளதால், அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதன் கணக்குகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த தொகையை நிறுவனம் செலுத்த தவறினால், நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதே போன்று கடந்த காலங்களில், எம்டிஎன்எல் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் அதாவது செப்டம்பரில், பஞ்சாப் நேஷனல் வங்கியும் எம்டிஎன்எல் ஐ என்பிஏ ஆக அறிவித்தது. மேலும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டும் இந்த நிறுவனத்தை என்பிஏ ஆக அறிவித்துள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஏற்கனவே எம்டிஎன்எல் தொடர்பான அனைத்து கணக்குகளையும் முடக்கியுள்ளது. ஆகஸ்ட் 30, 2024 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ. 31,944.51 கோடி ஆகும். இதுகுறித்து நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம் ரூ. 422.05 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை என்பது குறித்து பங்குச் சந்தைகளுக்கு தகவல் தெரிவித்தது
இந்த ரூ. 422.05 கோடியில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 155.76 கோடிகள், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 40.33 கோடி, பஞ்சாப் & சிந்து வங்கிக்கு ரூ. 40.01 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 41.54 கோடி, யூகோ வங்கிக்கு ரூ. 4.04 கோடி நிலுவையில் வைத்துள்ளது.
இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்களிலிருந்து வரும் வட்டியை ஈடுகட்ட எம்டிஎன்எல் ரூ.1,151.65 கோடியை அரசிடம் கோரியுள்ளது. எனவே, பட்ஜெட்டில், எம்டிஎன்எல் பத்திரங்களின் அசல் தொகையை செலுத்துவதற்காக, 3,668.97 கோடி ரூபாயை நிதி அமைச்சகம் ஒதுக்கியது.
எஸ்பிஐ தனது கடிதத்தில், எம்டிஎன்எல்இன் நிலப் பணமாக்குதல் திட்டத்தில், பணமாக்குதலின் மூலம் கிடைக்கும் வருமானம் நிலுவைத் தொகையைத் தீர்க்கப் பயன்படுத்தலாமா என்பது பற்றிய விவரங்களையும் எம்டிஎன்எல்லிடம் எஸ்பிஐ கோரியுள்ளது.
புது டெல்லியில் உள்ள பங்கா சாலையில் 13.88 ஏக்கர் நிலத்தை உருவாக்க என்பிசிசியுடன் எம்டிஎன்எல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களைக் கோரியுள்ளது. இது நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க பயன்படுத்தலாம் என்றும் கேட்டுகொண்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications