தோனிக்கு ரூ.6 கோடி, அபிஷேக் பச்சனுக்கு ரூ.19 லட்சம்.. அள்ளிக்கொடுக்கும் SBI வங்கி.. எதற்காக..?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ). இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான எம்எஸ் தோனிக்கு ரூ.6 கோடியும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு மாதந்தோறும் ரூ.19 லட்சமும் கொடுக்கிறது. இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக எஸ்பிஐ பணம் கொடுத்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டில் எஸ்பிஐ வங்கி, மகேந்திர சிங் தோனியை தனது பிராண்ட் தூதராக நியமனம் செய்தது. அதற்கான கட்டணமாக எம்எஸ் தோனி ரூ.6 கோடி வாங்குகிறார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எஸ்பிஐ வங்கியின் விளம்பர பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகி 6 ஆண்டுகளாகி விட்டது. இருப்பினும், பிராண்ட் ஒப்பந்தங்கள், வணிக முதலீடுகள் மற்றும் பிற வழிகளில் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு ரூ.6 கோடி, அபிஷேக் பச்சனுக்கு ரூ.19 லட்சம்.. அள்ளிக்கொடுக்கும் SBI வங்கி.. எதற்காக..?

2023 அக்டோபர் 28ம் தேதியன்று எஸ்பிஐ வெளியிட்ட பதிவில், எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறியதாவது, எஸ்பிஐயின் பிராண்ட் தூதராக எம்எஸ் தோனியை இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். திருப்திகரமான வாடிக்கையாளராக எஸ்பிஐயுடனான தோனியின் தொடர்பு, அவரை எங்கள் பிராண்டின் நெறிமுறைகளின் சரியான உருவகமாக்குகிறது. இந்த கூட்டாண்மையின் மூலம், நம்பிக்கை. நேர்மை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் நாட்டிற்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்து இருந்தார்.

பாலிவுட் சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு எஸ்பிஐ வங்கி மாதந்தோறும் ரூ.18.9 லட்சத்தை வாடகையாக கொடுத்து வருகிறது. அமிதாப் பச்சன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு 3,150 சதுர அடி அளவுள்ள இடத்தை எஸ்பிஐ வங்கிக்கு லீசுக்கு கொடுத்துள்ளார். மொத்தம் 15 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்ததுக்கு கொடுத்துள்ளார்.

இந்த குத்தகை ஒப்பந்தத்தில், வாடகை உயர்வுகளும் அடங்கும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மாத வாடகை ரூ.23.6 லட்சமாகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29.5 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரி 24ம் தேதி நிலவரப்படி. எஸ்பிஐ வங்கியில் இருந்து மாதத்திற்கு ரூ.18.9 லட்சத்தை வாடகையாக அமிதாப் பச்சன் பெறுகிறார்.

எஸ்பிஐ வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் நிகர லாபமாக ரூ.16,891 கோடி ஈட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எஸ்பிஐ பங்கின விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.62 சதவீதம் உயர்ந்து ரூ.754.05ஆக இருந்தது. எஸ்பிஐ பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6.72 லட்சம் கோடியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+