இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை அதாவது எம்சிஎல்ஆர் விகிதத்தை அனைத்து கடன்களுக்கும் 10 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.10 (பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் இது வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம், ஈஎம்ஐ தொகை உயர உள்ளது.
இதேபோல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 5 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை உயர்த்தியுள்ளது. வைப்பு நிதிக்கான புதிய வட்டி விகிதம் பிப்ரவரி 15 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்
இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இதன் மூலம் ஆர்பிஐ-யின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்ந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதி மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
MCLR விகிதம்
MCLR என்பது வங்கியால் கடன் கொடுக்க முடியாத குறைந்தபட்ச கடன் விகிதம் ஆகும். அதை அடிப்படையாகக் கொண்டு தான் கடன்களுக்கு வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும், மேலும் இந்த வட்டி விகிதம் தனிநபரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறுபடுவது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கடனுக்கும் மாறுபடும்.
கடனுக்கான வட்டி விகிதம்
எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எஸ்பிஐ ஓவர்நைட் எம்சிஎல்ஆர் விகிதத்தை 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் 10Bps உயர்த்தப்பட்டு 8.00 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ வங்கி கடன்
இதேபோல் எஸ்பிஐ வங்கி அதன் மூன்று மாத MCLR விகிதம் 8.10 சதவீதமாக உயர்த்தியுள்ளது,ஆறு மாத எம்சிஎல்ஆர் 8.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுக் கால MCLR விகிதம் 8.60 சதவீதமாக உள்ளது, 3 ஆண்டு MCLR விகிதம் 8.70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வைப்பு நிதி
இதேபோல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிரந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 5 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும், இது 2 கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள வைப்பு நிதிக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
வைப்பு நிதி வட்டி விகிதம்
இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கு 7.10 சதவீத வட்டி வருமானம் வழங்கும் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. மேலும் வழக்கம் போல் அனைத்து வைப்பு நிதி காலத்திற்கும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டி விகிதத்தில் கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள்.
மூத்த குடிமக்கள் வட்டி விகிதம்
உதாரணமாக 1 வருடம் முதல் 2 வருடத்திற்குக் கீழ் உள்ள அனைத்து நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
வட்டி வருமானம் உயர்வு
மேலும் 2 வருடம் முதல் 3 வருடத்திற்குக் கீழ் முதிர்வு காலம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 3-10 வருட முதிர்வு காலம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிக்கு 6.50% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு டிசம்பர் 13 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications