இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான முதலீடாக கருதும் வங்கி வைப்பு நிதிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் இத்தகைய அறிவிப்பு வந்தால் நாட்டு மக்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகித்தை உயர்த்தியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இன்ற வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 10, 2022 முதல் ரூ. 2 கோடிக்கு மேல் வைப்புத் தொகை (எஃப்டி) செய்யப்படும் அனைத்து திட்டத்தின் மீதும் வட்டி விகிதங்களை 20-40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் 2 கோடி ரூபாய்க்கு கீழ் இருக்கும் வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செய்யப்படும் வைப்பு நிதிக்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.
பெரும் பணக்காரர்கள்
இதன் மூலம் பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் செய்ய செய்யப்படும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான வைப்பு நிதிக்கு கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும். ஏற்கனவே பல வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 3.10 சதவீதத்தில் இருந்து 3.30 சதவீதமாக உயர்வு
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
மூத்த குடிமக்களுக்கு
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 3.60 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக உயர்வு
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
2 கோடி ரூபாயக்கு கீழ்
இதேபோல் 2 கோடி ரூபாயக்கு கீழ் செய்யப்படும் வைப்பு நிதிக்கு பிப்ரவரி மாதம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.10 சதவீதத்தில் இருந்து 5.20 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.30 சதவீதத்தில் இருந்து 5.45 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 5.40 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்வு
இதுவே மூத்தகுடி மக்களுக்கான வைப்பு நிதிக்கு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.60 சதவீதத்தில் இருந்து 5.70
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.80 சதவீதத்தில் இருந்து 5.95
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 6.20 சதவீதத்தில் இருந்து 6.30
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications