இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான முதலீடாக கருதும் வங்கி வைப்பு நிதிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் இத்தகைய அறிவிப்பு வந்தால் நாட்டு மக்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகித்தை உயர்த்தியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இன்ற வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 10, 2022 முதல் ரூ. 2 கோடிக்கு மேல் வைப்புத் தொகை (எஃப்டி) செய்யப்படும் அனைத்து திட்டத்தின் மீதும் வட்டி விகிதங்களை 20-40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் 2 கோடி ரூபாய்க்கு கீழ் இருக்கும் வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செய்யப்படும் வைப்பு நிதிக்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.
பெரும் பணக்காரர்கள்
இதன் மூலம் பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் செய்ய செய்யப்படும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான வைப்பு நிதிக்கு கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும். ஏற்கனவே பல வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 3.10 சதவீதத்தில் இருந்து 3.30 சதவீதமாக உயர்வு
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
மூத்த குடிமக்களுக்கு
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 3.60 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக உயர்வு
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
2 கோடி ரூபாயக்கு கீழ்
இதேபோல் 2 கோடி ரூபாயக்கு கீழ் செய்யப்படும் வைப்பு நிதிக்கு பிப்ரவரி மாதம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.10 சதவீதத்தில் இருந்து 5.20 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.30 சதவீதத்தில் இருந்து 5.45 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 5.40 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்வு
இதுவே மூத்தகுடி மக்களுக்கான வைப்பு நிதிக்கு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.60 சதவீதத்தில் இருந்து 5.70
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.80 சதவீதத்தில் இருந்து 5.95
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 6.20 சதவீதத்தில் இருந்து 6.30
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications