இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிதாக ஒரு சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சிறப்புத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் அளிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அனைத்திற்கும் மேலாக இந்தச் சிறப்பு வைப்பு நிதி திட்டத்திற்குக் கூடுதலான வட்டி வருமானத்தையும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளதால் சாமானிய மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இத்திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பிளாட்டினம் டெபாசிட் திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஒரு குறுகிய காலத் திட்டத்திற்கும், சிறப்புக் குறுகிய காலத் திட்டத்திற்கும் அளிக்கப்பட்டு உள்ளது.
75 நாள் முதிர்வு காலம்
75 நாள் முதிர்வு காலம் கொண்ட டர்ம் டெபாசிட் திட்டத்திற்கும், 75 மாதம் முதிர்வு காலம் கொண்டு இரு டெபாசிட் திட்டத்திற்குப் பிற திட்டங்களைக் காட்டிலும் 0.15 சதவீதம் வரையிலான அதிக வட்டி வருமானத்தை அளிக்க உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
சிறப்பு வைப்பு நிதி
தனிநபர்கள் தங்கள் விருப்பதின் பெயரில் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 525 நாள், 2250 நாள் கொண்ட திட்டத்தையும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இந்தச் சலுகை 2 கோடி ரூபாய்க்குக் குறைவாக வைப்புத் தொகை கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம்
மேலும் இத்திட்டம் செப்டம்பர் 14, 2021 வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதாலும், தற்போது சந்தையில் இருக்கும் மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் என்பதாலும் இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
வட்டி விகிதம் அளவீடுகள்
தற்போது எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 75 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்திற்குத் தற்போது 3.90 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது, தற்போது சிறப்புச் சலுகை அடிப்படையில் 3.95 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.
பெரிய திட்டங்கள்
இதேபோல் 525 முதிர்வு நாள் கொண்ட வைப்பு நிதிக்கு 5 சதவீதத்தில் இருந்து 5.10 சதவீதமும், 2250 முதிர்வு நாள் அதாவது 75 மாத முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 5.40 சதவீத வட்டியில் இருந்து 5.55 சதவீத வட்டி வருமானத்தை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது.
இதேபோலவே மூத்தகுடி மக்களுக்குமான திட்டத்திற்கு 0.05 சதவீதம், 0.10 சதவீதம், 0.15 சதவீதம் கூடுதலான வட்டி வருமானத்தை அளிக்கிறது எஸ்பிஐ வங்கி.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications