சென்னை: நம் அனைவருக்கும் தெரியும் 5G தொழில்நுட்பம் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று. ஆனால் இந்த 5G தொழில்நுட்பத்தில் வோடபோன் ஐடியா (Vi ) பின்தங்கி உள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம் பண பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான அரசு நடத்தும் கடன் வழங்குநர்களின் கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான வோடபோன் ஐடியாவுக்கு (Vi) ரூ.14,000 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
கடுமையான இழப்புகளில் இருந்து மீள்வதற்கான முயற்சியாக, Vi நிறுவனம் ரூ.25,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.14,000 கோடி கடன் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் அரசுடைமை வங்கிகளின் கூட்டமைப்பில் உள்ளனர். எந்த வங்கிகளிடமிருந்தோ அல்லது வோடபோன் ஐடியாவிலிருந்தோ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், வோடபோன் ஐடியாவுக்கு ரூ. 14,000 கோடி கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொண்டதாக வங்கி விவகாரங்களை நன்கு அறிந்த நபர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்ததாக TNIE செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கடன் தவணை முறையில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கடன் மூலம் வரும் பணத்தை வைத்து 5G நெட்வொர்க்கை உருவாக்கவும், கூடுதல் நெட்வொர்க் டவர்களை வைக்கவும் Vi திட்டமிட்டுள்ளது. Vi தலைமை நிர்வாகி அக்ஷயா மூந்த்ரா சென்ற மாதம், கடன்களை வழங்குவதற்கு முன் பங்குகளை உயர்த்துவதற்கு வங்கிகள் விரும்பி உள்ளன. எனவே FPO முதலில் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் நீண்ட காலமாக வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தோம். அதில் அவர்கள் எங்களிடம் பங்குகளை முதலில் உயர்த்தும் படி கோரிக்கை வைத்தனர். எனவே நாங்களும் அவ்வாறே பங்குகளை உயர்த்தினோம். அதேபோன்று இப்போதும் நாங்கள் மீண்டும் வங்கிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம் என்று மே 17 அன்று vi தலைமை நிர்வாகி மூந்த்ரா ஆய்வாளர்களிடம் கூறியுள்ளார். vi நிறுவனத்தின் ஒட்டுமொத்த வங்கிக் கடன் ரூ. 40,000 கோடி என்ற நிலையில் இருந்தது. ஆனால் இப்பொது ரூ. 4000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2024ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், Vi நிறுவனம் அதிகரித்த இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ரூ. 6,418.9 கோடியாக இருந்த நிகர இழப்பு, இந்த காலாண்டில் ரூ. 7,674 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், வருவாய் கடந்த ஆண்டின் ரூ. 10,531 கோடியில் இருந்து ரூ. 10,606 கோடியாக சிறிது உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு பயனரிடம் இருந்து கிடைக்கும் வருவாயைக் காட்டும் ARPU மதிப்பு, கடந்த காலாண்டில் ரூ. 145 ஆக இருந்தது மற்றும் கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டின் ரூ. 135 ஆக இருந்த நிலையில், இந்த காலாண்டில் ரூ. 146 ஆக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications