ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் இருமடங்கு அதிகரித்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 130 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்ததாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 45 சதவீதம் அதிகரித்து, 18,458 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,745 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இதுவே நிகர பிரீமிய வருவாய் 22 சதவீதம் அதிகரித்து, 12,858 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 10,111.51 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த காலாண்டில், நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 1,86,360 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 1,54,760 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஏயுஎம் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த பாதியாண்டில் நிகரலாபம் 680 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் பாதியில் 500 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீத வளர்ச்சியாகும்.
புதிய பிரீமிய வர்த்தகம் 15 சதவீதம் அதிகரித்து 9000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7,820 கோடி ரூபாயாக இருந்தது.
ஆக மொத்தத்தில் நெட்வொர்த் மதிப்பு 20 சதவீதம் அதிகரித்து 9,660 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8,070 கோடி ரூபாயாக இருந்தது.
கொரோனாவினால் இந்த நிறுவனம் சற்று பாதிப்பினை கண்டு இருந்தாலும், தேவை அதிகரிப்பு லாபத்திற்கு வழிவகுத்துள்ளது. புதிய பிரீமியமும் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பிஎன்பி பாரிபஸ் நிறுவனத்தின் (BNP Paribas Cardif SA) கூட்டமைப்பாகும்.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 4 ரூபாய் சரிந்து, 774 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications