இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இந்திய வரலாற்றில் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் செய்திடாத வகையில் QIP எனப்படும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
எஸ்பிஐ தற்போது திட்டமிட்டுள்ள படி சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அடுத்த வாரம் நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்க தயாராகி வருகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்த விஷயத்தை அறிந்தவர்கள் ஈடி-க்கு தெரிவித்துள்ளனர்.

இந்த பங்கு விற்பனை வெற்றிகரமாக முடிந்தால், 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 22,560 கோடி ரூபாய் பங்கு விற்பனை சாதனையை முறியடிக்கப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய QIP விற்பனையாக விளங்கும்.
எஸ்பிஐ-யின் இந்த மாபெரும் பங்கு விற்பனை முக்கியமான கட்டத்தில் நடக்கிறது. ஒருபக்கம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்து வருகிறது, இதேபோல் மக்களும் விலைவாசியை சமாளிக்க வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அதிகளவில் செலவு செய்து வருகின்றனர். மேலும் வட்டி விகிதம் குறைந்து வரும் காரணத்தால் வைப்பு நிதியும் குறைந்து வருகிறது. இதனால் எஸ்பிஐ வங்கிக்கான நிதி ஆதாரம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதேவேளையில் எஸ்பிஐ வங்கி தனியார் வங்கிகளுடன் பல பிரிவுகளில் போட்டிப்போட்டு வரும் வேளையில் அதிகப்படியான நிதி தேவை உள்ளது. இந்த நிலையில் வங்கியின் கடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும், நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட உள்ளது. எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மே மாதம் இந்த பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கியில் மத்திய அரசு சுமார் 57.59 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, இதை தொடர்ந்து எல்ஐசி 9.02 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு 2வது பெரிய பங்குதாரராக உள்ளது. எஸ்பிஐ வங்கி 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பங்குச் சந்தையை நிதி தேவைக்காக அணுகுகிறது. இந்த பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் 25000 கோடி ரூபாய் வங்கியின் மூலதனத்தை வலுப்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
மேலும் எஸ்பிஐ நிர்வாகம் இந்த பங்கு விற்பனை இன்னும் இறுதி செய்யப்படவில்லை, திட்டத்தை மாற்றுவதற்கும் வாய்ப்பு அதிகமாகவே உளஅளது. இந்த 25000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளின் விற்பனையை நிர்வகிக்க, எஸ்பிஐ ஆறு முதலீட்டு வங்கிகளை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த 6 வங்கிகள் பட்டியலில் சிட்டிகுரூப் இன்க் மற்றும் எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் இந்திய கிளைகளும், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், கோடக் மஹிந்திரா முதலீட்டு வங்கி, மார்கன் ஸ்டான்லி, மற்றும் எஸ்பிஐ கேப்பிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக, எஸ்பிஐ நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2024-25 நிதியாண்டில், எஸ்பிஐயின் மொத்த சொத்து மதிப்பு 61 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது, இது இந்திய வங்கித்துறையில் அதன் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications