நாட்டின் மிகப்பெரிய வங்கியாகவும், அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டு யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மார்ச் 2023 காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வியக்க வைக்கும் லாபத்தை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
மார்ச் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 83 சதவீதம் உயர்ந்து 16,694.51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என வியாழனன்று தெரிவித்துள்ளது.

ஜனவரி-மார்ச் 2023 இல் அதன் நிகர வட்டி வருமானம் மட்டுமே 40,392.50 கோடி ரூபாயாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் மார்ச் காலாண்டு 31,197 கோடி ரூபாய் உடன் ஒப்பிடுகையில் சுமார் 29.5 சதவீதம் அதிகமாகும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக குழு 2023ஆம் ஆண்டுக்கான ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 11.30 ரூபாய் அளிக்க பரிந்துரை செய்துள்ளது. எஸ்பிஐ பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி ஜூன் 14, 2023 அன்று இந்த 11.30 ரூபாய் ஈவுத்தொகை பங்குதாரர்களுக்கு செலுத்தப்படும்.
2022-23 முழு நிதியாண்டில் மொத்தமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிகர லாபம் 59 சதவீதம் உயர்ந்து 50,232.45 கோடி ரூபாயாக உள்ளது.
மார்ச் 2023 காலாண்டில் எஸ்பிஐ-யின் சொத்துத் தரம் உயர்ந்துள்ளது பங்கு முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் (GNPA) அக்டோபர் - டிசம்பர் 2022 காலாண்டில் 98.347 கோடி ரூபாயாக இருந்த நிலையில் மார்ச் காலாண்டில் 90,927.8 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதத்திஸ் 8427.8 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன் குறைந்துள்ளது.
ஜனவரி-மார்ச் 2023 இல் எஸ்பிஐ வங்கியின் மொத்த NPA விகிதம் 2.78 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது கடந்த காலாண்டில் 3.14 சதவீதமாக இருந்தது. அதன் நிகர NPA விகிதமும் டிசம்பர் 2022 காலாண்டில் 0.77 சதவீதத்திலிருந்து 0.67 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மார்ச் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் சொத்துக்கள் மீதான வருமானம் 0.96 சதவீதமும், பங்குகள் மீதான முதலீட்டுக்கு 19.43 சதவீத வருமானமும் பெறுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கி பங்குகள் 1.77 சதவீத சரிவுடன் 574.15 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications