இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் யோனோ செயலி சிஸ்டம் அவுடேஜ் காரணமாக முடங்கியது. இதனால் பல கோடி எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
இதேபோன்ற நிகழ்வு நவம்பர் 21ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியும் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
யோனோ சேவை முடங்கியதன் எதிரொலியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் சமுக வலைத்தளத்தில் சேவை முடங்கியதை பற்றிப் பல பதிவுகளைச் செய்தனர்.
இன்று காலை யோனோ எஸ்பிஐ வங்கி செயலியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக M005 என்ற Error செய்தியைப் பெற்றுள்ளனர்.
மாற்று வழிகள்
மேலும் வாடிக்கையாளர்களுக்கு யோனோ எஸ்பிஐ மொபைல் செயலி சிஸ்டம் அவுடேஜ் காரணமாக முடங்கியுள்ளது. இச்சேவை தொடர்ந்து மக்களுக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கையா எடுத்துவருவாதாகவும் தெரிவித்து, வாடிக்கையாளர்களிடம் இந்த நிலைக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது.
49 கோடி வாடிக்கையாளர்கள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சுமார் 49 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு தினமும் தனது டிஜிட்டல் சேவைகள் மூலம் 4 லட்ச பரிமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
மேலும் இவ்வங்கியின் 55 சதவீத வங்கி பரிமாற்றங்கள் டிஜிட்டல் நிதியியல் சேவை வாயிலாக எதிர்கொண்டு வரும் நிலையில் யோனோ எஸ்பிஐ ஆப் வாயிலாகத் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பணப் பரிமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணிநேரம் முழுமையாக முடங்கியது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை யாரும் மறந்திருக்க முடியாது.
ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தைக் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளைக் கொடுக்கத் தற்காலிக தடையை வித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications