சென்னை: ரயிலில் பயணம் செய்பவர்களை குறிவைத்து போலிப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், X தளத்தில் @Sankott என்ற பயனர் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரயிலில் பயணிகளுக்கு போலி பவர் பேங்க் விற்பனை செய்யும் ஒரு நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
ரயிலில் போலியான பவர் பேங்குகளை விற்பனை செய்த நபர் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர், சாம்சங் (samsung) மற்றும் விவோ ( vivo) மொபைல்களுக்கான பவர் பேங்குகளை விற்பனை செய்கிறார். அதன் பிறகு, அவர் விற்பனை செய்த அனைத்தும் போலியானவை என்று மக்கள் கண்டறிந்தனர். ரயிலில் ஒரு பயணியிடம், பவர் பேங்குகளை காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த பயணி பவர் பேங்க் சரியாக வேலை செய்யுமா என்று சோதித்து பார்ப்பதற்கு ஒரு பவர் பேங்கை பயன்படுத்தி பார்த்துள்ளார்.

அவ்வாறு பயன்படுத்திய போது அந்த பவர் பேங்க் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிய வந்தது. உடனே அந்தப் பயணி பவர் பேங்கை ஆய்வு செய்தபோது, அது மண்ணால் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அப்போது அந்த நபருக்கும் விற்பனையாளருக்கும் மோதல் ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். sankott எனும் நபர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுத்து X தளத்தில் ஜூன் 18 அன்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்து ஷேர்களையும், 331.1K லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனக்கும் இது போன்ற ஒரு நிகழ்வு ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அவர்கள் பவர் பேங்க்-இன் உள்ளே மண் மற்றும் கல் ஆகியவற்றை வைத்து மக்களை முட்டாள்களாக்குகிறார்கள் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொரு X பயனர், " இந்த நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் உயர் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்று கூறியுள்ளார்.
இது போன்று விற்பனை செய்பவர்கள் ரயிலுக்குள் எவ்வாறு நுழைகிறார்கள் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. அவர்களிடம் ரயில் டிக்கெட்டை கேட்கவோ அவ்வாறு டிக்கெட் இல்லை என்றால் ரயிலில் இருந்து அவர்களை வெளியேற்றவோ யாருக்கும் தைரியம் இல்லை" என்று மற்றொரு X பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
திருடுவதற்கு ஒரு புதிய முறையை கண்டறிந்து உள்ளார்கள் இது போன்ற நிகழ்வுகளை தடுப்பது மிகவும் அவசியம் என்று மற்றொரு X பயனாளர் கமெண்ட் செய்துள்ளார்.
அதனால் பேருந்திலோ ரயிலிலோ நீங்கள் பயணிக்கும் பொழுது வெளி ஆட்கள் விற்பனை செய்யும் பொருட்களை வாங்க வேண்டாம். அவ்வாறு வாங்குவதாக இருந்தால் அந்தப் பொருளின் தரத்தை ஆராய்ந்து வாங்குங்கள். பின் நீங்கள் தரும் பணத்திற்கு அந்த பொருள் தகுதியானதா என்று யோசித்து பின்னர் வாங்குங்கள்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!



Click it and Unblock the Notifications