சீல்மேட்டிக் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 17 அன்று அதன் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று கூறப்படும். ஏனெனில் நல்ல நல்ல நிறுவனங்களின் பங்கு விலை கூட, குறைவாக கிடைக்கும்.
அந்த வகையில் நாளை சீல்மேட்டிக் நிறுவனம் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
விலை எவ்வளவு?
மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்த 56.24 கோடி ரூபாய் நிதியினை பங்கு வெளியீட்டிந் மூலம் திரட்ட உள்ளது. இந்த வெளியீட்டில் பங்கு விலையானது 220 - 225 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்குகள்?
இந்த வெளியீட்டில் நிறுவனம் 18.50 லட்சம் புதிய பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வெளியீட்டில் ஒவ்வொரு பங்கின் முக மதிப்பு 10 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே புரோமோட்டர்கள் வசம் உள்ள 6,49,600 ஈக்விட்டி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
எப்போது பட்டியல்?
பிப்ரவரி 17 ஆன வெள்ளிக்கிழமையன்று தொடங்கவுள்ள இந்த வெளியீடானது பிப்ரவரி 21 அன்று முடிவடையவுள்ளது. இப்பங்குகள் மார்ச் 1, 2023-க்குள் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பங்கானது பி.எஸ்.இ-யில் மட்டும் பட்டியலிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாட் சைஸ்
இந்த பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு லாட் சைஸ் என்பது 600 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக ஒரு வாடிக்கையாளர் முதலீடு செய்ய வேண்டுமெனில் 1,35,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சில்லறை முதலீட்டாலர்கள் ஒருவர் ஒரு லாட் மட்டுமே வாங்க முடியும் எனலாம். இதே ஹெச்.என்.ஐ முதலீட்டாளர் எனில் அதிகபட்சம் இரண்டு லாட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.
எதற்காக நிதி திரட்டல்?
இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது ஆலை மற்றும் இயந்திரங்கள் வாங்குதல், தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், விற்பனைக்கு பிந்தைய ஆதரவு, செயல்பாட்டிற்கு தேவையான மூலதனத்தினை அதிகரித்தல் என வளர்ச்சிக்கு தேவையான பலவற்றிற்கும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயன் என்ன?
பயந்தர் (மகாராஷ்டிராவை ) தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் சீல்மேட்டிக் இந்தியா இயந்திரம் சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. இதன் பொருட்கள் பெரும்பாலும் பல்புகள் மற்றும் பேப்பர், ஆயில் & கேஸ், சுத்திகரிப்பு பொருட்கள், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல், உரங்கள், மின்சாரம், சுரங்கம், ஏரோஸ்பேஷ், கப்பல், பார்மா நிறுவனங்கள், தொழிற்துறை இயந்திரங்கள் என பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
எவ்வளவு நாடுகளில் வணிகம்
தற்போது இந்த நிறுவனம் இந்தியா உள்பட 45 நாடுகளில் தனது இருப்பினை கொண்டுள்ளது. இதில் அமெரிக்கா, சுவேடன், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நார்வே, சுவிட்சர்லாந்து, டென் மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். இதன் உற்பத்தி தானேவில் செய்யப்படுகின்றது.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இந்த பங்கு வெளியீட்டில் நிறுவனம் 40% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு (NII) 18%மும், மீதமுள்ள 42% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications