ஒரு நாடு பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் வளர வளர அதன் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அந்த கையில் இந்தியா ஆயுத உற்பத்தி, போர் கப்பல், போர் விமானம், ஏவுகணை ஆகியவற்றை தாண்டி தற்போது வெடிமருந்து துறையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT) என பிரபலமாக அறியப்படும் வெடிமருந்தை விட 2.01 மடங்கு அதிக சக்தி கொண்ட ஒரு புதிய வெடிமருந்தை உருவாக்கி, அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழையும் பெற்றுள்ளது. இது என்ன பெரிய விஷயமா என பலரும் கேட்கலாம். ஆம், ரொம்ப பெரிய விஷயம்.

Economic Explosives Limited என்ற நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் SEBEX 2 என்ற அபூர்வமான வெடிமருந்தை உருவாக்கி வெற்றிகண்டு உள்ளது. இந்த வெடிமருந்து மூலம் இந்திய பாதுகாப்புத் துறைக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது.
எந்தொரு ஏவுகணையாக இருந்தாலும், இதில் இருக்கும் வெடிமருந்து தான் மிகவும் முக்கியமானது. இந்த வகையில் இந்திய நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த அதிக ஆற்றல் கொண்ட வெடிமருந்து, உலகின் மிகச் சக்தி வாய்ந்த அணுக்குண்டு அல்லாத வெடிமருந்துகளில் ஒன்றாக உள்ளது.
இந்த புதிய வெடிமருந்து கலவையை, இந்திய கடற்படை விரிவாக சோதனை செய்து அதன் பின்பு ஒப்புதல் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த புதிய வெடிமருந்து கலவை மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமான படைகள் பயன்படுத்தும் வெகுண்டுகள், பீரங்கி குண்டுகள் மற்றும் போர் ஏவுகணைகள் எவ்விதமான எடை வித்தியாசம் செய்யாமல் அதிக அழிவு திறனை பெற உள்ளது.
அதாவது 1 கிலோ ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT) பயன்படுத்தும் இடத்தில் 500 கிராம் வெடி மருத்தைப் பயன்படுத்தினால் போதும், அதே அளவிற்கான தாக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும். இந்த புதிய மற்றும் அரிய வெடிமருந்தின் பெயர் SEBEX 2.
உலகமெங்கிலும் உள்ள ராணுவங்கள் தங்களுடைய ஆயுதங்களின் திறனை அதிகரிக்க விரும்புவதால், இந்தியா உருவாக்கிய SEBEX 2-க்கு வெளிநாட்டு ஏற்றுமதி சந்தையிலும் பெரும் டிமாண்ட இருப்பதாக கருதப்படுகிறது.
SEBEX 2 வெடிமருந்து, இந்திய கடற்படையின் பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டுச் சான்றளிக்கப்பட்டுள்ளது. Economic Explosives Limited நிறுவனம் SEBEX 2 மட்டும் அல்லாமல் SITBEX 1, SIMEX 4 என்ற இன்னும் இரண்டு வெடி மருந்தை உருவாக்கியுள்ளது. இதேபோல் அடுத்த 6 மாதத்தில் TNT காட்டிலும் 2.3 மடங்கு அதிக சக்திவாய்ந்த மருத்தை கண்டுபிடிக்கும் பணியில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த SEBEX 2 வெடிமருந்துகளின் செயல்திறன் TNT-க்கு இணையான தன்மையில் (TNT equivalence) அளவிடப்படுகிறது. இதன் அடிப்படையில் Brahmos ஏவுகணை இப்புதிய வெடிமருத்து மூலம் 1.50 மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. இதேபோல் பிற ஏவுகணைகள் 1.25-1.30 மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications