இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி முறைகேடாக நிறுவனத்தின் நிதியைக் கடனாகக் கொடுத்துத் தனிப்பட்ட முறையில் பலனடைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, அனில் அம்பானி மற்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் என அனைவரும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 5 வருடம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் செபி அமைப்பு அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தொரு நிறுவனத்திலும் தலைவராகவோ, முக்கிய நிர்வாக பொறுப்பிலோ இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பல வழிகளில் பாதிப்பை எதிர்கொண்டு வரும் அனில் அம்பானிக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் முறைகேடாக நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செபி விசாரணை நடத்திய 222 பக்க இறுதி ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.
இந்த ஆய்வில் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருக்கும் நிதியை இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை முறைகேடாக இவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் இதை நிறுத்த முயன்றும், முறையற்ற வகையில் இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நிதிநிலைக்கு முற்றிலும் புறம்பான கடன்களை அள்ளிக்கொடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளது.
அது அனைத்தும் அனில் அம்பானி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ADA குரூப் மூலம் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வைத்திருக்கும் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணத்தைத் திருடப்பட்டு உள்ளது. மேலும் இப்படிக் கொடுக்கப்பட்ட கடன்கள் திருப்பி செலுத்தப்படாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்-ல் முதலீடு செய்தவர்களும், பங்கு முதலீட்டாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மார்ச் 2018ல் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்கு விலை 59.60 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 2020ல் இதன் விலை வெறும் 0.75 ரூபாயாக குறைந்துள்ளது. இன்னுமும் 9 லட்சம் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
தற்போது செபி தடை செய்துள்ள 24 நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான அமித் பாப்னா, ரவீந்திர சுதல்கர் மற்றும் பிங்கேஷ் ஆர். ஷா ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களும் அடங்கும்.
செபி அமைப்பு அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தது போல், அமித் பாப்னா-க்கு ரூ.27 கோடியும், ரவீந்திர சுதல்கர் ரூ.26 கோடியும் மற்றும் பிங்கேஷ் ஆர். ஷா ரூ.21 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரிலையன்ஸ் யூனிக்கார்ன் என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் எல்டி, ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் தலா ரூ. 25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications