டெல்லி: முதலீட்டாளர்களுக்கு பர்சனல் பைனான்ஸ் பற்றிய கல்வி அறிவை வழங்குவதற்காக, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) புதிய Saa ₹thi 2.0 என்ற மொபைல் செயலியை கடந்த திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
முதலீட்டாளர்கள் பலர், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சிக்கலான விஷயங்களை புரிந்துகொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதிலும் ஆரம்ப நிலையாளர்களுக்கு, இதுபோன்ற விஷயங்கள் சற்று சிக்கலானதாகவே இருக்கும். இதனால் தவறான முதலீடுகள் செய்து பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில், முதலீட்டாளர்களுக்கு நிதி கல்வியை எளிதாகக் கற்றுத்தரும் வகையில் Saa ₹thi 2.0 செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Saa ₹thi 2.0 செயலியின் சிறப்பம்சங்கள்:
யூசர் பிரெண்ட்லி இன்டர்பேஸ் (User Friendly Interface): எளிமையான மற்றும் பயன்படுத்த எளிதான இன்டர்பேஸ் கொண்ட இந்த செயலி, நிதி கருத்துகளை புரிந்துகொள்ள உதவுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர்கள்: ஓய்வுகால திட்டமிடல், குழந்தைகளின் கல்விக்கான செலவு போன்ற பல்வேறு நிதி இலக்குகளுக்கான, நிதி கால்குலேட்டர்கள் இந்த செயலியில் உள்ளன. KYC (Know Your Customer) நடைமுறைகள், பங்குச்சந்தை அடிப்படைகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் கன்டென்ட் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எளிதில் நீங்கள் பங்குச் சந்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
வீடியோக்கள்: சிக்கலான நிதி சார்ந்த விஷயங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் வீடியோக்கள் இந்த செயலியில் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொடர்பான பிரச்சனைகளை புகாரளிக்க இந்த செயலி உதவுகிறது.
முதலீட்டாளர்கள் ஏன் Saa ₹thi 2.0 செயலியை பயன்படுத்த வேண்டும்?
1. நிதி கல்வி பெறுவதற்கு எளிதான வழி.
2. பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றைப் பற்றி அடிப்படை அறிவைப் பெற உதவும்.
3. நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளை தேர்வு செய்ய உதவும்.
4. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். முதலீட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலம் Saa ₹thi 2.0 செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி முதலீடு செய்யும் போது தவறான வழிநடத்தல்கள், மூலம் பண இழப்பு அபாயங்கள் ஏற்படலாம். இது போன்ற விஷயங்களை தடுப்பதற்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications