தென்னிந்திய நகரங்களான சென்னை, கோவை மற்றும் பெங்களூரு ஆகியவை இந்தியாவின் வளர்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வசதி துறையில் முன்னணி வகிக்கின்றன. இந்த துறையில் தற்போது கிடைக்கும் மொத்த 20,000 வீடுகளில் கிட்டத்தட்ட 60% பங்கு இந்த தென்னிந்திய நகரங்களில் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம்..? பொதுவாக ஒரு இடத்தில் டிமாண்ட் இருந்தால் மட்டுமே அதற்கான சந்தை உருவாகும். அப்படிப் பார்க்கும் போதும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வசதி திட்டத்தில் சுமார் 60 சதவீதம் சென்னை, கோவை, பெங்களூரில் இருப்பது இப்பகுதியில் அதிகப்படியான மூத்தக்குடி மக்கள் இருப்பதைக் காட்டுகிறது.

ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வளர்ச்சி, வர்த்தகம், சேவைகள், தேவைகள் அனைத்தும் மாறியுள்ளது. இதே நிலை தான் தற்போது சென்னை, கோவை, பெங்களூரில் உருவாகிறதா என்ற கேள்வி எழுகிறது.
மூத்த குடிமக்களுக்கான மொத்த குடியிருப்பில் 60 சதவீதம் தென்னிந்தியாவில் இருக்கும் வேளையில், வட இந்திய நகரங்களில் 20%, மேற்கு இந்தியா 16% மற்றும் கிழக்கு இந்தியா வெறும் 4% பங்கைக் கொண்டுள்ளன. இந்த பங்கீட்டை மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தாண்டி, மூத்த குடிமக்களின் பொருளாதார நிலையையும் காட்டுகிறது. அதாவது தென்னிந்தியா மூத்த குடிமக்களின் நிதி நிலை நாட்டின் மற்ற பகுதிகளை விடவும் மேம்பட்ட நிலையில் உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான ரியல் எஸ்டேட் அல்லது குடியிருப்புகள் என்பது, முதுமையின் காரணமாக மக்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் குடியிருப்புகளும், வசதிகள் கொண்ட பகுதி. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான ஒரு அப்பார்ட்மென்ட் என்றால் வீட்டு முழுவதும் வயதனாவர்கள் நடக்க ஏதுவான தரைதளத்தில் துவங்கி பாத்ரூம்-ல் தேவையான இடத்தை கைபிடி வரையில், காமன் கிட்சன் அமைப்பு முதல் 24 மணிநேரமும் மருத்துவ வசதிகள் வரையில் சகலமும் இருக்கும்.
இத்தகைய கட்டமைப்பில் மூத்த குடிமக்கள் யாருடைய உதவியும் நம்பி இல்லாமல் தனியாக வாழ முடியும். இதுபோன்ற குடியிருப்புகளை தற்போது என்ஆர்ஐ மக்கள் அவர்களது பெற்றோர்களுக்கான அதிகம் வாங்குகின்றனர். அப்படி பார்க்கும் போது தென்னிந்தியாவில் இருக்கும் மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியாக வரும்.
இந்தியாவின் மக்கள்தொகை வயதாகி வருவதும் மூத்த குடிமக்களுக்கான ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக உள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 346 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகை மாற்றம், மூத்த குடிமக்களுக்கான ரியல் எஸ்டேட் துறையை 2030 ஆம் ஆண்டுக்குள் ரூ.64,500 கோடியாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறை ஆண்டுக்கு சுமார் 27% வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் மட்டுமே இந்தியாவின் மொத்த மூத்த குடிமக்களுக்கான வசிப்பிட பங்கில் கிட்டத்தட்ட 45% பங்கைக் கொண்டுள்ளன. டெல்லி-NCR, புனே மற்றும் அகமதாபாத் ஆகியவை தங்கள் தனித்தனி பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளன. மறுபுறம், கொல்கத்தா கிழக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் சிறிய பங்கைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications