டெல்லி: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்வாகி இருக்கும் நிலையில், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக விரைவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள தகவலில் இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்களாம்.

டொனால்ட் டிரம்பை பொருத்தவரை அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது மற்றும் தொழில் துறையை ஊக்குவிப்பது என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவருடைய கவனம் முழுவதும் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தான் இருக்கும் .
அதே வேளையில் அவர் மற்ற நாடுகளோடு வர்த்தக ரீதியான உறவில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவின் வரி நடைமுறைகள் குறித்தும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அதாவது இந்தியா ஒரு tariff king என விமர்சித்துள்ளார். இந்தியா மோசமான வரி நடைமுறைகளையும் வர்த்தக நடைமுறைகளையும் பின்பற்றுவதாக அவர் கூறியிருக்கிறார்.
ஏனெனில் இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பல பொருள்களுக்கு பல மடங்கு வரி விதிப்பதாகவும் தொடர்ந்து சாடி வருகிறார். இந்த நிலையில் ட்ரம்ப் ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் தற்போது இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் குறித்து அவரது அரசாங்கத்திற்கு எடுத்து உரைக்கும் வகையில் ஆவணங்களை மத்திய அரசு அதிகாரிகள் தீவிரமாக தயாரித்து வருகின்றனர்.
ஏனெனில் கடந்த முறை அதிபராக இருந்தபோது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரி நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை தயார் செய்தார். ஆனால் அது அப்போது நடைமுறைக்கு வரவில்லை.
டொனால்ட் டிரம்ப் முதல் முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தார்.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் விதித்தார். பின்னர் இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்புக்கு சென்று இந்த பிரச்சினையை சரி செய்து கொண்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் அமெரிக்காவுக்கு தான் செல்கின்றன . அதேபோல இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு செய்துள்ள மூன்றாவது பெரிய நாடாக அமெரிக்கா இருக்கிறது.
எனவே டிரம்ப அரசாங்கம் இருநாட்டு வர்த்தகத்தில் மாற்றம் கொண்டு வரும் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு துரிதமாக இருக்கிறது.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications