அமலாக்க துறை கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு தொடர்புடையோருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்துக்கொண்டு இருக்கும் கரூரில் முக்கிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் முக்கிய விஷயத்தை கூறினார்.
செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடையோரின் வீடு அலுவலகம் ஆகியவைற்றில் வருமான வரித்துறை, செய்த பல கட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் இருப்பதால்தான் அமலாக்கத்துறை தற்போது சோதனையிட வந்திருக்கிறது.

வருமான வரித்துறை எந்த ஆவணம், எதுப்பற்றிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள என்பது எங்களுக்குத் தெரியாது. அது அமலாக்கத் துறையின் வழக்கு மூலமாகவே தெரிய வரும் என கூறினார் இராம.சீனிவாசன்.
பொதுவாக அமலாக்கத்துறை சோதனை நடந்தால், தொடர்புடையோரின் அனைத்துச் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும். இப்படி நடந்தால் இனி செந்தில் பாலாஜி எந்த சொத்துகளை விற்கவோ வாங்கவோ முடியாது. இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை விரைவில் எடுக்கும் என எதிர்பார்ப்தாக தெரிவித்தார் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுக ஆட்சியில் 2011-ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது இத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை மே மாத இறுதியில் இருந்து பல்வேறு இடத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூரில் அவரது சகோதரர் விட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதோடு அமலாக்க துறை தலைமைச் செயலக அலுவலகத்தில் செந்தில் பாலாஜி அலுவலகத்திலும் நேற்று நீண்ட நேரம் சோதனை நடத்தினர்.
நேற்று காலை செந்தில் பாலாஜி வாக்கிங் சென்ற நேரத்தில் அமலாக்க துறை அவரது வீட்டில் சோதனை செய்ய துவங்கியது. அமலாக்க துறையின் நீண்ட நேர சோதனைகளுக்குப் பிறகு அமலாக்க துறை விசாரணைக்கு தேவையான ஆவணங்களை கைப்பற்றிய நிலையில்..
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு நேற்று இரவு அழைத்துச் சென்ற நிலையில் அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலிப்பதாக கதறி அழுதார் இதை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications