மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பல்லி ஹில் பகுதியில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை பல கோடி ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் மும்பையின் பல்லி ஹில் பகுதியில் இருக்கும் இரண்டு டியூப்லெக்ஸ் அப்பார்ட்மெண்டுகளை வாடகைக்கு எடுத்திருப்பதாக Zapkey என்ற அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி இந்த வீடு வாடகை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதாக அந்த தகவல் கூறுகிறது. மும்பையின் பல்லி ஹில் பகுதியில் உள்ள கார் என்ற இடத்தில் இருக்கும் பூஜா காசா என்ற ஆடம்பர குடியிருப்பு பகுதியில் தான் இந்த இரண்டு வீடுகளும் இருக்கின்றன.
இரண்டு டியூப்லெக்ஸ் அபார்ட்மெண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு 24.15 லட்சம் ரூபாய் என ஒரு ஆண்டுக்கு 2.9 கோடி ரூபாய்க்கு இவர் வாடகையாக செலுத்த இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 36 மாதங்களுக்கு இந்த வாடகை ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியிடமிருந்து இந்த இரண்டு குடியிருப்புகளையும் ஷாருக்கான் வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கானும் அவரது மனைவி கௌரி கானும் மும்பையில் பாந்த்ரா பகுதியில் மன்னத் என்ற மிகப்பெரிய மாளிகையில் வசித்து வருகின்றனர். ஷாருக்கான் பொருத்தவரை அண்மையில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் டங்கி படத்தில் தோன்றியிருந்தார். தற்போது இவர் சுஜய் ரோஷனின் இயக்கத்தில் கிங் படத்தில் நடிக்கிறார். தன்னுடைய மகள் சுகானா கானுடன் முதன்முறையாக இணைந்து ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். இவருடைய திரைப்படங்களை தாண்டி இவருக்கு இவருடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மூலம் பெருமளவிலான லாபம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இவர் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் மன்னத் என்ற பெயரில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய மாளிகை இவருக்கு சொந்தமாக இருக்கிறது. இது தவிர லண்டன் , துபாய் , டெல்லி ஆகிய நகரங்களிலும் இவர் சொந்தமாக குடியிருப்புகளை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், போன்ற பல்வேறு ஆடம்பர கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications