விடைபெறுகிறேன் மக்களே.. சக்திகாந்த தாஸ் சொன்ன கடைசி விஷயம்..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே, பதவி நீட்டிப்பை மறுப்பதற்கான தான் இப்படி செய்கிறார் என தகவல் கசிந்தது. ஆனால் எதிர்பார்த்த படியே சக்திகாந்த தாஸ்-க்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு அளிக்கவில்லை, இதனால் இப்பதவியில் மத்திய நிதியமைச்சகத்தில் வருவாய் பிரிவு செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா 26வது ஆர்பிஐ கவர்னராக நேற்று நியமிக்கப்பட்டார்.

இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவி வகிக்கும் இறுதி நாள் என்பதால் முக்கியமான செய்திகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தரப்பில் இருந்து ரெப்போ விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று கடுமையான நிர்ப்பந்தம் எழுந்தது. குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் ரெப்போ விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விடைபெறுகிறேன் மக்களே.. சக்திகாந்த தாஸ் சொன்ன கடைசி விஷயம்..!!

ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் நாட்டின் பணவீக்கம், சாமானிய மக்களின் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்து, தனது இருமாத நாணய கொள்கையில் சிஆர்ஆர் விகிதத்தை மட்டும் 4.5 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாகக் குறைத்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய நிதியமைச்சகத்தில் வருவாய் பிரிவு செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா-வை நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சக்திகாந்த தாஸ் டிவிட்டரில் 5 பதவிகளை வெளியிட்டுள்ளார். இதில் முதல் பதிவில் இன்று ஆர்பிஐ கர்வனர் பதவியில் இருந்து வெளியேறுகிறேன், அனைவரின் ஒத்துழைப்பும், வாழ்த்துக்களுக்கும் நன்றி என துவங்கிய இப்பதிவில், ஆர்பிஐ கவர்னராக 6 வருடம் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி, தொடர்ந்து எனக்கு பல வகையில் உறுதுணையாக இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-க்கு நன்றி, 6 வருடத்தில் பல சவாலான சூழ்நிலையை இணைந்து சமாளித்தோம் என தெரிவித்தார் சக்திகாந்த தாஸ்.

கிடைசியாக ரிசர்வ் வங்கியின் பணியாற்றும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி, உலகளாவிய மோசமான காலகட்டத்தில் வெற்றிகரமாக நாட்டின் பொருளாதார பாதிப்புகளை தாண்டி வளர்ச்சி பாதைக்கு இணைந்து இந்தியாவை திருப்பினோம். ஆர்பிஐ மற்றும் ஆர்பிஐ நிர்வாகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

டிசம்பர் 12, 2018ல் ஆர்பிஐ கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் திடிரென ஆர்பிஐ கர்வனர் பதவியில் இருந்து வெளியேறிய பின்பு நாட்டின் பொருளாதாரத்தையும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சக்திகாந்த தாஸ்-க்கு வந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+