ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்-ன் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைய உள்ள நிலையில், அவருடைய பதவிகாலம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் நேற்று சக்திகாந்த தாஸ் அசிடிட்டி பிரச்சனையை எதிர்கொண்ட காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார், இவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பு செய்வதாக ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.
சக்திகாந்த தாஸ் முதல் முறையாக ஆர்பிஐ கவர்னராக பதவியேற்றிய பின்பு 2வது முறையாகப் பதவி நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிந்த நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது. அடுத்த மாதம் இவருடைய பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் மகாராஷ்டிரா - ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், தேர்தல் விதிமுறைக்காக மத்திய அரசு எந்தொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதே காரணத்தால் தான் மத்திய அரசு இந்த வாரத்தின் துவக்கத்தில் கிட்டத்தட்ட 9 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தான் சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கி கவர்னராக மீண்டும் நியமிக்கும் செயல்முறையைத் தாமதமாக்கியுள்ளது.
நவம்பர் 23-ம் தேதி இரு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநரை நியமிப்பது தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அமைச்சரவையின் நியமனக் குழு செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்த பதவி நீட்டிப்பில் சக்திகாந்த தாஸ்-க்கு முழு மூன்றாண்டு பதவிக்காலம் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 12 ஆம் தேதி முடிவடைந்த பிறகு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என அரசு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications