பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்.
பங்களாதேஷ் நாட்டில் உள்நாட்டு மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் தனது உயிரை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் அடைந்தார், இதை தொர்ந்து அந்நாட்டில் பல கட்ட முயற்சிகளுக்கு பின்பு தேர்தல் நடந்து தற்போது புது ஆட்சி அமைந்து, அமைதி திரும்பியுள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கும் ஷேக் ஹசீனா ராய்ட்டர்ஸ்-யிடம் இந்த வருட இறுதியில் தான் தாய் நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.

நான் மட்டும் அல்லாமல் என்னுடைய அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்களும் தன்னுடன் பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார், மேலும் அவர் பாங்களாதேஷ் சென்ற உடன் என்னை அவர்கள் கைது செய்யலாம் அல்லது கொலையும் செய்யலாம்.. ஆனாலும் நான் செல்ல வேண்டும். என்னுடைய கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் பங்களாதேஷ் அரசால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். மரணம் வந்தாலும் என்னுடைய மண்ணிலேயே, என்னுடைய பெற்றோர் புதைக்கப்பட்ட இடத்திலேயே, அவர்கள் ரத்தம் சிந்திய இடத்திலேயே நானும் புதைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா 20 வருடங்களாக பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக இருந்த நிலையில், வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை மக்கள் கலவரமாக மாறியது. இதை தொடர்ந்து 2024ல் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்தார்.
அந்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஷேக் ஹசீனா-வை நாடு கடத்த கோரிக்கை இந்திய அரசிடம் வைக்கப்பட்ட நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது அந்நாட்டில் BNP என்ற பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications