ரயில்வேயின் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விரைவில் ரயில் கட்டணங்கள் உயரலாம் என்று கூறப்படுகிறது. ரயில்வேக்கான நாடாளுமன்ற கமிட்டி, பயணிகள் பிரிவில் இருந்து இந்திய ரயில்வே ஈட்டும் வருவாய் குறித்து கவலை தரும் தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், சரக்கு வருவாயை விட பயணிகள் பிரிவில் இருந்து வரும் வருவாய் மிகவும் குறைவு என்று அந்த குழு குறிப்பிட்டுள்ளது. எனவே, இதனை ஈடுகட்ட பயணிகள் பிரிவில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க ஏசி வகுப்பு கட்டணத்தை மறுஆய்வு செய்ய இந்திய ரயில்வேக்கு குழு பரிந்துரைத்துள்ளது. எனவே, ரயில் டிக்கெட்டுகளின் டிக்கெட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உயர்த்தப்படும் ஏசி வகுப்பு டிக்கெட்: இந்த நாடாளுமன்ற குழு பரிந்துரையில், சாதாரண வகுப்புக் கட்டணங்களில் மாற்றம் செய்ய தேவையில் என்று இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. மாறாக, ஏசி வகுப்புகளுக்கான டிக்கெட் விலையில் மாற்றம் செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே, கமிட்டியின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றினால், ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளின் டிக்கெட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2024-25 நிதிச் சுழற்சிக்காக ரயில்வே அமைச்சகம் கோரிய நிதியின் முதல் மதிப்பாய்வை குழுத் தலைவர் டாக்டர் சி.எம்.ரமேஷ் வழங்கினார். அதன்படி, பயணிகள் பிரிவு ரூ.80,000 கோடியை ஈர்க்கும் என்று கணிப்புகள் காட்டுகின்றன. மேலும் சரக்கு சேவையில் வரும் நிதியாண்டில் ரூ.1.8 லட்சம் கோடியை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த குழு பல்வேறு ரயில் வகைகளில் கட்டண கட்டமைப்புகள் பற்றிய விரிவான மறுஆய்வின் அவசியத்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள்: பயணிகள் ரயில்களின் இயக்கச் செலவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய ரயில்வேக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. எனவே, டிக்கெட்டுகளின் விலையை குறைந்த விலையில் வைத்திருக்கவும், செலவைக் குறைக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே சுமார் 56,993 கோடி ரூபாய் மொத்த சலுகைகளை வழங்குகிறது. இந்த தள்ளுபடி திட்டத்தில் ஒவ்வொரு டிக்கெட்டின் குறிப்பிடத்தக்க சராசரி கட்டணக் குறைப்பு 46% அடங்கும். எனவே, இந்திய ரயில்வே ஏசி ரயில்களின் கட்டணத்தை உயர்த்தினால், அது இந்திய நடுத்தர மக்களுக்கு மோசமான செய்தியாக இருக்கும்.
இந்திய ரயில்வே: இந்திய இரயில்வே என்பது இந்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் ஒரு துறை நிறுவனமாக ஒழுங்கமைக்கப்பட்டு இந்தியாவின் தேசிய இரயில்வே அமைப்பை இயக்கும் ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும். இந்தியாவில் இயங்கும் 42 வெவ்வேறு இரயில்வே நிறுவனங்களின் ஒருங்கிணைப்பால் இந்திய இரயில்வே நிறுவப்பட்டது. இது மொத்தம் 55,000 கி.மீ கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications