மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கக்கூடிய பொருட்களுக்கான இறக்குமதி வரி தொடர்பாக வெளியான அறிவிப்பு தான்.
நாம் வெளிநாடுகளுக்கு செல்கிறோம் அங்கே நமக்கு பிடித்த அல்லது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், போன்கள் மற்றும் துணிமணி, பிராண்டட் ஷூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகிறோம். அதனை இந்தியாவிற்கு கொண்டு வரும்போது 20 சதவீத வரி செலுத்தியாக வேண்டி இருக்கிறது. அதேபோல நீங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் 20% இறக்குமதி வரி என்பது உண்டு.

இந்த வரியை தான் நிர்மலா சீதாராமன் மாற்றி அமைத்திருக்கிறார். அதாவது நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பொருளை வாங்கிக்கொண்டு இந்தியாவிற்கு வருகை தருகிறீர்கள் அல்லது ஈகாமர்ஸ் தளங்கள் வழியாக வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை ஆர்டர் செய்து பெறுகிறீர்கள், ஷாப்பிங் செய்கிறீர்கள் எனும் போது அந்த பொருட்களுக்கு இதுநாள் வரை விதிக்கப்பட்டு வந்த 20 சதவீத இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் நீங்கள் வாங்கக்கூடிய அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரக்கூடிய பொருள் வர்த்தக ரீதியாகவோ விற்பனைக்காக பயன்படுத்தக் கூடாது . உங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பொருளாக மட்டுமே அது இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பொருளுக்கு இறக்குமதி வரி 20 சதவீதத்திலிருந்து 10% ஆக குறையும்.
எனவே துணிமணிகள், ஷூ, மொபைல் போன், டேப்லட்கள் மற்றும் பிற கருவிகளை நீங்கள் இனி குறைந்த கட்டணத்திற்கு வாங்க முடியும். ஆன்லைன் தளங்களில் நீங்கள் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால் முன்பை விட இனி குறைந்த கட்டணத்தில் இந்த பொருட்கள் கிடைக்கும். ஏனெனில் இதற்கான இறக்குமதி வரி என்பது குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய ஜென் ஸீ இளைஞர்கள் பல்வேறு வெளிநாட்டு பிராண்டுகளின் பொருட்களை நேரடியாக வாங்கி அணிய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
கொரிய நாட்டு பொருட்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பே இருக்கிறது. இனி கொரியாவில் இருந்தே பிராண்டட் பொருட்களை அதிகாரப்பூர்வமாக நீங்கள் ஆர்டர் செய்து பயன்படுத்த முடியும். தவறான வழிகளில் இந்த பொருட்கள் இந்தியாவை வந்து அடைவது தடுக்கப்படும். மேலும் மக்கள் ஒரிஜினல் பிராண்ட்ட் பொருட்களை நேரடியாக அதை விற்பனை செய்யும் நிறுவனத்திடமே வாங்க கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications