சிங்கப்பூர் SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கிய நிகழ்வு. காணொளி மூலம் நடந்த நிகழ்வில் நிதியமைச்சர் கலந்துகொண்டார்.
இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல நாடுகளும், அமைப்புகளும் உதவி செய்து வரும் நிலையில் Singapore Indian Chamber of Commerce and Industry மற்றும் Little India Shopkeepers & Heritage Association இணைந்து சுமார் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டி நன்கொடை அளித்துள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எல்லை கடந்து நான் சிங்கப்பூரில் கொண்ட நட்பு, தக்க சமயத்தில் உதவ முன்வந்து, SICCI & LISHA சங்கமும் இணைந்து இந்தியாவின் கோவிட் நிலவரத்தைக் கையாள்வதற்கு நன்கொடை வழங்கியது மகிழ்வை அளிக்கிறது. இந்த உறவு மேலும் நீடித்து மக்கள் முன்னேற்றத்திற்காகச் செயலாற்றுவோம் என டிவீட் செய்துள்ளார்.