சர்வதேச அளவில் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 80ஆவது இடம் கிடைத்திருக்கிறது. 'Henley Passport Index' என்ற பெயரில் ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டை சேர்ந்தது என்ற புள்ளிவிவரம் வெளியிடப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அதை கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமலும் , வருகையின் போது வழங்கப்படக்கூடிய on arrival visa பெற தகுதி பெற்று இருக்கின்றனர் என்ற அடிப்படையில் தான் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை பெற்றுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியுமாம்.
இந்த பட்டியலில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். மூன்றாவது இடத்தை ஆறு நாடுகள் பகிர்ந்துள்ளன. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து , லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இடம் பிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் 2025 ஆம் ஆண்டில் 80ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் . இது கடந்தாண்டு 57 ஆக இருந்தது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் இந்த பட்டியலில் 101 வது இடத்தில் இருந்து 103 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 34 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
இந்த பட்டியலில் குறிப்பிட்ட நாடுகளின் பாஸ்போர்ட்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகள் மோசமான இடத்தில் உள்ளன. சோமாலியா, வங்கதேசம், வடகொரியா ஆகிய நாடுகளும் மோசமான பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் சிங்கப்பூரோடு சேர்த்து ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவையும் முதலிடத்தில் இருந்தன. தற்போது சிங்கப்பூர் மட்டுமே முதலிடத்தில் இருக்கிறது மற்ற நாடுகள் 2 மற்றும் 3ஆம் இடங்களுக்கு சென்று விட்டன.
Story Written By: Devika
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications