வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு தீவையே விலைக்கு வாங்குவது சர்வ சாதாரணமான நிகழ்வுதான்.
ஆனால் இந்தியாவை சேர்ந்த அதுவும் ஒரு பாடகர் சொந்தமாக ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளார் என்றும் அந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கியுள்ளது என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அந்த பாடகர் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பாடகர் மிகா சிங்
பிரபல பாடகர் மிகா சிங் என்பவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அந்த தீவில் ஒரு ஏரியும் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பாடகர் மிகா சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த தீவுக்கு அவர் விசைப்படகில் செல்லும் காட்சிகள் உள்ளது.
முதல் இந்திய பாடகர்
இதனை அடுத்து சொந்தமாக ஒரு தீவை வைத்திருக்கும் முதல் இந்திய பாடகர் என்ற பெருமை பாடகர் மிகா சிங் அவர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மிகா சிங் வாங்கிய தீவின் மதிப்பு எவ்வளவு? அந்த தீவு எங்கே உள்ளது? போன்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை
ஏரியுடன் கூடிய தீவு
பாடகர் மிகாசிங் வாங்கிய தீவில் பரந்து விரிந்து தண்ணீர் உள்ள ஏரியும் உள்ளது என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். அதேபோல் அந்த தீவில் அவர் 7 படகுகள் வைத்திருக்கிறார் என்பதும், 10 குதிரைகள் வைத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படகுகள் மற்றும் குதிரைகளை அவர் தீவை சுற்றிப்பார்க்க போக்குவரத்து வாகனமாக பயன்படுத்துகிறார்.
வீடியோ
பாடகர் மிகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீவில் உள்ள ஏரியில் விசைப்படகில் செல்லும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாடகர் மிகா சிங் சொர்க்கத்தில் தனது நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர்தான் உண்மையான ராஜா என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்
பாப் பாடகர்
45 வயதான மிகா சிங், மேற்குவங்கத்தை சேர்ந்தவர். 1977ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பாப் பாடகர் என்பதும், இவர் பாடிய ஏராளமான பாலிவுட் திரைப்பட பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications