தர்மபுரி அடையாளமே மாறப்போகுது.. ஒரே திட்டத்தில் 20000 பேருக்கு வேலை.. SIPCOT அதிரடி..!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலருக்கு உயர்த்தவும், மாநிலத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பெரிய நிறுவனங்களையும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் சிப்காட் தொழிற்பூங்கா அமைத்து வருகிறது.

இந்த நிலையில் பல வருடமாக முடங்கியிருந்த தர்மபுரி சிப்காட் பணிகள் சமீபத்தில் சூடுபிடிக்கத் துவங்கிய நிலையில், தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 10 வருடத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி-யில் சிப்காட் மற்றும் இதர தொழிற்பூங்காவில் ஏகப்பட்ட தொழிற்சாலைகளும், முதலீடுகளும் குவிந்த காரணத்தால் தர்மபுரி சிப்காட் மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

தர்மபுரி அடையாளமே மாறப்போகுது.. ஒரே திட்டத்தில் 20000 பேருக்கு வேலை..  SIPCOT அதிரடி..!

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தொழில் ஊக்குவிப்பு கழகம் (சிப்காட்), தர்மபுரி மாவட்டத்தில் நான்கு கிராமங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைக்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.

இதுகுறித்து சிப்காட் நிர்வாக இயக்குநர் கே.செந்தில்ராஜ் கூறுகையில், மத்திய அமைச்சகத்தின் உறுப்பினர் செயலாளர் (இன்ஃப்ரா-1) க்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அறிவித்தார். இந்த அறிக்கையின் படி சிப்காட் நிர்வாகம் தர்மபுரி தாலுக்காவின் அதகபாடி கிராமம், நல்லம்பள்ளி தாலுக்காவின் அதியமான் கோட்டை, தடங்கம் மற்றும் பாலஜங்கமன்ஹல்லி கிராமங்களில் இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

சிப்காட் அமைப்பு தர்மபுரி மாவட்டத்தில் சுமார் நான்கு கிராமங்களில் 1724.566 ஏக்கர் பரப்பளவில் 7(c) - ஏ வகை திட்டத்தின் கீழ் தொழிற்பூங்கா அமைக்கும். இதற்காகத் தமிழ்நாடு அரசு சுமார் 462 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் இந்த தொழிற்பூங்கா மூலம் சுமார் 18,700 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் மற்றும் ஓசூரில் தற்போது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன, இத்துறை வளர்ச்சிக்கு ஏற்றார் போல் தர்மபுரி சிப்காட் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதன் மூலம் தர்மபுரியும் EV துறை நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அமைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இதேபோல் இந்த சிப்காட் தொழிற்துறை பகுதியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் சிவப்பு பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் இங்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தர்மபுரி சிப்காட்-ல் ஏற்கனவே ஓலா மற்றும் பிற நிறுவனங்களின் முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரே இடத்தில் அட்வான்ஸ் செல் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலை, விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்காக்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரிய துணை சுற்றுச்சூழலை கொண்ட EV ஹப் அமைக்கும் திட்டத்தில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+