அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட்.. ரூ.367 கோடி சொத்து அசரவைக்கும் தாய்லாந்து இளவரசி..!

மன்னராட்சி முறை பெரும்பாலான நாடுகளில் நீக்கப்பட்டாலும், சில நாடுகளில் இன்னும் மன்னராட்சி உள்ளது, அதில் தாய்லாந்தும் ஒன்று. அந்நாட்டு இளவரசி சிரிவண்ணவாரி உலகின் கோடீஸ்வர இளவரசிகளில் ஒருவர் ஆவார். இவரது வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்னுக்கும் (Vajiralongkorn) அவரது முன்னாள் மனைவி சுஜாரினி விவச்சரவோங்சேக்கும் பிறந்த ஒரே பெண் குழந்தை சிரிவண்ணவாரி நாரிரத்னா ராஜகன்யா (Sirivannavari Nariratana Rajakanya). தாய்லாந்து இளவரசியான அவர் 1987 ஜனவரி 8ம் தேதி பிறந்தார். இவருக்கு 4 உடன்பிறப்புகள் உள்ளனர்.

அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட்.. ரூ.367 கோடி சொத்து அசரவைக்கும் தாய்லாந்து இளவரசி..!

மன்னரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு இளவரசியின் தாயார் சுஜாரினி இங்கிலாந்து சென்றார், அவருடன் சிரிவண்ணவாரியையும் அழைத்து சென்றார். ஆனால் பின்னர் தாய்லாந்து மன்னர் தனது மகள் சிரிவண்ணவாரியை கடத்தி, நாடு திரும்பும்படி உத்தரவிட்டார்.

2005 ஜூன் 15ம் தேதியன்று அவரது தாத்தா மன்னர் பூமிாபல் அதுல்யதேஜின் அரச கட்டளையால் சிரிவண்ணவாரி நாரிரத்னா ராஜகன்யா இளவரசி அந்தஸ்துக்கு முன்னேறினார். இளவரசி என்பதற்காக எப்போதும் அரண்மனையில் அவர் அடைந்து கிடக்கவில்லை. விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்.

2005ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் தாய்லாந்து அணிக்காக பேட்மிண்டனில் பங்கேற்று, குழுவில் தங்கம் வென்றார். சிரிவண்ணவாரி ஒரு குதிரையேற்ற வீராங்கனை. இவர் தனது 9 வயதில் குதிரை சவாரி செய்ய தொடங்கினார்.

அவர் பிரான்சில் சர்வதேச மானிட்யூர் ஈக்விடேஷன், Le Cadre Noir de Saumur-ல் பயிற்சி பெற்றார். 2013 மற்றும் 2017 தென் கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் தாய் குதிரையேற்ற விளையாட்டு குழுவின் உறுப்பினராக போட்டியிட்டார். தாய்லாந்து இளவரசி பேஷனில் அதிக ஆர்வம் கொண்டவர். 2007ல் ஆடைகளை தயாரித்து விற்பைன செய்யும் பிரான்ஸின் ஆடை வடிவமைப்பாளரான பியர் பால்மெய்னை உதவியுடன் பாரீஸில் தனது பேஷன் ஷோ நடத்தினார்.

அவரது முதல் பேஷன் ஷோ பிரசன்ஸ் ஆஃப் தி பாஸ்ட் என பெயரிடப்பட்டது. இது அவரது பாட்டியின் நினைவுகளை ஈர்த்தது மற்றும் பாரம்பரிய தாய் உடையின் நவீன பார்வையை வழங்கினார். சிரிவண்ணவாரி என்ற பேஷன் பிராண்டை நடத்தி வருகிறார். இதுதவிர தாய்லாந்து ராணுவத்திலும் நிபுணத்துவம் பெற்றவர். அந்நாட்டு ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியில் உள்ளார். ராயல் தாய் ராணுவத்தில் கிங்ஸ் கார்ட் 2வது குதிரைபை்படை பிரிவின் ராயல் ஸ்டேபிள் பிரிவின் புரவலராக இருந்தார்.

உலகின் பணக்கார இளவரசிகளில் ஒருவராக சிரிவண்ணவாரியும் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.367 கோடியாகும். இவரது தந்தையும் தாய்லாந்து மன்னருமான வஜ்ரலாங்கோர்ன் உலகின் பணக்கார மன்னர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.2.49 லட்சம் கோடி முதல் ரூ.5.81 லட்சம் கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இளவரசி சிரிவண்ணவாரி ஒரு சேகரிப்பாளரும் கூட. பல வைரங்கள், மரகதங்கள் மற்றும் பிற ரத்தினங்களும் அவரது சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+