நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 45 நாட்கள் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 41% வீழ்ச்சி கண்டுள்ளது.
எனினும் இந்த ஆண்டின் கடைசி இரு காலாண்டுகளில் இது புத்துயிர் பெற வாய்ப்புள்ளதாக சிஎம்ஆரின் இந்தியா மொபைல் ஹேண்ட்செட் சந்தை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வீழ்ச்சி
இந்த ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கிகளிப்பினை வழங்கிய ரெட்மி 8ஏ டூயல், ரெட்மி 8 மற்றும் ரெட்மி நோட் 8 வழங்கியுள்ளன. அதிக பங்கினை கொண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தலைவராக ரெட்மி இருந்தது. இதையடுத்து ஜியோமி 30% பங்கினை வகித்துள்ளது.
சாம்சங் விற்பனை அதிகரிப்பு
இதே தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் 24% பங்கினை கொண்டுள்ளது. இது கடந்த காலாண்டை விட 8% அதிகமாகும். சாம்சங்கினை பொறுத்த வரையில் சாம்சங் கேலக்ஸி எம் 11, A21S and A31 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் 50% பங்கு வகித்தன. எனினும் சீன பிராண்டான விவோவின் சந்தை சற்றே குறைந்து 17% ஆகியுள்ளது. இது Y19 மற்றும் Y91i, புதிய அறிமுகமான Y50 ஆகியவை அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 55% பங்களித்துள்ளன.
சீன நிறுவனங்கள் வீழ்ச்சி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ரியல்மி இந்திய பங்கு சந்தையில் நுழைந்ததில் இருந்தே தற்போது தான் 2 சதவீத சரிவினைக் கண்டுள்ளது. ஒப்போவும் அதன் சந்தையில் 3% இழந்துள்ளது. இதே போல் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சற்று பின்னடவை சந்தித்துள்ளன. சொல்லப்போனால் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டன.
களைகட்டிய ஆன்லைன் விற்பனை
ஒரு புறம் லாக்டவுன் காரணமாக ஆலைகளை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தன. இதே மறுபுறம் ஆலைகள் திறக்கப்பட்டாலும், போதிய உதிரி பாகங்கள் கிடைக்காமையால் உற்பத்தி செய்ய முடியாமல் தவித்தன. அப்படியே இது எல்லாவற்றையும் மீறி ஏற்றுமதி செய்வதிலும் பிரச்சனைகள் நீடித்தன. எனினும் லாக்டவுன் சமயத்தில் இந்தியாவில் சில்லறை வர்த்தக கடைகள் இல்லாததன் காரணமாக, ஆன்லைன் விற்பனை களைகட்டியது என்றே கூறலாம்.
மூன்றாவது காலாண்டில் விற்பனை அதிகரிக்கலாம்
எனினும் இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் முதல் நான்கு பிராண்டுகளில் 4 சீனாவுடையது தான். வரவிருக்கும் மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிக்கலாம், ஏனெனில் வரவிரும் பண்டிகைகால விற்பனையாவது கைகொடுக்கும் என்பது நிறுவனங்களின் நம்பிக்கை. பொறுத்திருந்து தான் பார்ப்போமே. இந்த கொரோனா எந்தளவுக்கு கைகொடுக்கிறது என்று.