ஸ்னாப்டீலின் அதிரடி திட்டம்.. விழாக்கால விற்பனைக்காக 5000 புதிய விற்பனையாளர்கள் இணைப்பு.. !

இந்தியாவினை சேர்ந்த ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனம் தான் ஸ்னாப்டீல்.

ஆன்லைனில் நீங்கள் பொருட்களை வாங்குபவராக இருந்தால் நிச்சயம் இந்த நிறுவனத்தினையும் அறிந்திருக்க முடியும்.

அமேசான், பிளிப்கார்ட் மட்டும் அல்ல, இந்தியாவின் ஸ்னாப்டீல் நிறுவனமும் தீபாவளி விற்பனை சலுகையை அறிவிக்கலாம் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டீலில் 5,000 விற்பனையாளர்கள் இணைப்பு

ஸ்னாப்டீலில் 5,000 விற்பனையாளர்கள் இணைப்பு

இதற்காக இந்த நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 5000க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஸ்னாப்டீல் தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் அதிகம்பேர் செப்டம்பர் காலாண்டில் இணைந்துள்ளனர். இது இந்த நிறுவனம் தொடக்கத்தில், நிர்ணயித்த இலக்கினையும் தாண்டியுள்ளதாக, மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக பிசினஸ் டுடே கூறுகின்றது.

லாக்டவுனால் பயன்

லாக்டவுனால் பயன்

ஸ்னாப்டீல் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே விற்பனையாளர்களையும், உற்பத்தியாளர்களையும் இணைக்க தொடங்கினாலும், செப்டம்பர் காலாண்டில் தான் அதிகளவு இணைத்துள்ளது. லாக்டவுன் காரணமாக வாடிக்கையாளார்களின் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்றபட்டுள்ளன. இதனால் ஆன்லைன் விற்பனையாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

புதிய விற்பனையாளர்களை சேர்ப்பது, விரைவாக பொருட்களை சேர்ப்பதற்கு உதவும். இந்த நிறுவனத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளார்கள் உள்ளனர். அவர்கள் பட்டியலிடப்பட்டுள்ள 213 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை வாங்கலாம்.

என்னென்ன பொருட்கள்?

என்னென்ன பொருட்கள்?

தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் சமையலறை கேட்ஜெட்களான ஜூஷர்கள், புட் புராசசர்ஸ், ஸ்டீல் & காப்பர் பாத்திரங்கள், பீப்பாய் பொருட்கள், விரிப்புகள், துணிகள், கைக்கடிகாரங்கள், வாலட்கள், பேஷன் மற்றும் அலங்கார பொருட்கள், குழந்தைகளுக்கான உடைகள், புடவைகள், பணியன் டீ-சர்ட்கள், டிராக் பேன்ட்கள் உள்ளிட்ட பல விற்பனையாளரும் அடங்கியுள்ளனர்.

புதிய லாகிஸ்டிக்ஸ்

புதிய லாகிஸ்டிக்ஸ்

அடுத்து வரும் பண்டிகை கால விற்பனைக்காக ஸ்னாப்டீல் அண்மையில் 25 லாகிஸ்டிக்ஸ் செண்டர்களை தொடங்கியது. இது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய பெரு நகரங்களிலும், சூரத், ஜெய்ப்பூர், பானிபட், குருகிராம், பகதூர்கர், யமுனா நகர், ராஜ்கோட், பிவாண்டி, ஆக்ரா, நொய்டா, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது.

சலுகை எவ்வளவு?

சலுகை எவ்வளவு?

எனினும் இந்த விழாக்கால சலுகையில் என்னென்ன பொருட்களுக்கு சலுகை., எவ்வளவு சலுகை, தள்ளுபடி, என்று இந்த விழாக்கால விற்பனை ஆரம்பிக்கவுள்ளது என்பதனை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் அக்டோபர் 16 அன்று இந்த விழாக்கால விற்பனையானது ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல சலுகைகளும் அன்று அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+