சென்னை: ஜப்பான் நாட்டின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான Softbank இன் முதலீட்டு நிறுவனமான Softbank Vision Fund, இந்தியாவின் பிரபல பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்திலிருந்து ஜூன் காலாண்டில் சுமார் 150 மில்லியன் டாலர் இழப்புடன் இந்நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறியுள்ளது.
2017 ஆம் ஆண்டில், பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பல கட்டங்களாக Softbank சுமார் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்து பெரும் பங்குகளைக் கைப்பற்றி முக்கிய பங்குதாரராக இருந்தது. இந்த முதலீட்டை பேடிஎம் ஐபிஓ வெளியிட்ட போதே திரும்ப எடுக்க முடிவு செய்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது.

இதை தொடர்ந்து நல்ல விலைக்கு பங்குகள் உயரும் போது போட்ட காசையாவது திரும்ப எடுக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்த நிலையில் காத்திருந்தது போதும் என முடிவு செய்த Softbank Vision Fund 150 மில்லியன் டாலர் நஷ்டத்தில் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளது. இதன் மூலம் Softbank நிறுவனம் பேடிஎம் நிறுவனத்திலிருந்து 10-12 சதவீத இழப்புடன் வெளியேறியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் IPO முன்னதாக, Softbank நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 18.5 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இதில், SVF இந்தியா ஹோல்டிங்ஸ் (கேமன்) லிமிடெட் மூலம் 17.3 சதவீத பங்குகளையும், SVF பான்தர் (கேமன்) லிமிடெட் மூலம் 1.2 சதவீத பங்குகளையும் வைத்திருந்தது.
பேடிஎம் பங்கு வெளியீட்டின் போது, SVF பான்தர் தனது முழு பங்குகளையும் ரூ.1,689 கோடிக்கு (சுமார் 225 மில்லியன் டாலர்) விற்றுவிட்டது. இந்த நிலையில் பேடிஎம் ஏற்கனவே ஐபிஓ வெளியீட்டிலிருந்து 24 மாதங்களில் வெளியேறுவோம் என்று Softbank அறிவித்திருந்தது. இந்த வெளியேற்றம் Softbank-ன் திட்டப்பட்டது என்றாலும், இழப்பை எதிர்பார்த்திருக்கவில்லை.
Softbank Vision Fund வங்கிய பேடிஎம் பங்குகள் சுமார் ரூ.800 என்ற சராசரி விலையில் வாங்கியது. ஆனால் பேடிஎம்-ன் IPO விலையான ரூ.2,150 ஐ இதுவரை எட்டவில்லை. தற்போதைய பங்கு விலை ரூ.1,955 ஆக இருந்தாலும், இது பங்கு வெளியீட்டு விலையைக் காட்டிலும் 9 சதவீதம் குறைவு.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications