இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் இன்றைய வர்த்தக சந்தையின் முக்கியமான பிராண்ட் அம்பாசிட்டராகவும், ஒரு பிராண்டின் முகமாகவும் விளங்குகின்றனர். தோனி, சச்சின் துவங்கி வைபவ் சூர்யவன்ஷி வரையில் விளம்பரங்கள் மூலம் கோடிகளை அள்ளுகின்றனர். இதேபோல் மறுபக்கம் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதை தாண்டி பல முதலீடுகளையும், பிஸ்னஸ்-களையும் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச போட்டியில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற ரோடு மேப் போட்டுக்கொடுத்து, இந்திய அணியின் அடையாளத்தை மாற்றிய சிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி, புதிய அடையாளத்துடன், புதிய பிஸ்னஸ் ஐடியா உடன் வர்த்தக சந்தையில் குதித்துள்ளார்.

சவுரவ் கங்குலி, இந்தியாவின் வளர்ந்து வரும் பாரம்பரிய ஆடைகள் சந்தையில் தனது முத்திரையை பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதுவும் குறிப்பாக தனது சொந்த மாநிலமான மேற்கு வங்களத்தின் முக்கிய பண்டியான துர்கா பூஜா-வை முன்னிட்டு தனது ஆடை வர்த்தகத்தை துவங்தியுள்ளார்.
சவுரவ் கங்குலி மிந்த்ரா உடன் இணைந்து, தனது புதிய பிராண்டான சௌராக்யா-வை (Souragya) அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிரீமியம் பாரம்பரிய உடை பிராண்ட், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு அறிமுகமாகியுள்ளது மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற இலக்காக கொண்டு சந்தைக்கு வந்துள்ளது.
மிந்த்ராவின் மொத்த விற்பனைப் பிரிவான மிந்த்ரா ஜாபாங் இந்தியா உடன் சவுரவ் கங்குலி இணைந்து சௌராக்யா பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சௌராக்யா, மேற்கு வங்காளத்தின் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் உருவ அமைப்புகளை தேசிய அளவில் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிராண்ட், பாரம்பரிய உடைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத்தில் மேலும் பல ஃபேஷன் உடைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இது, இந்தியாவின் வளர்ந்து வரும் ஃபேஷன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.
சவுரவ் கங்குலி குடும்பம் ஸ்டீல் தொழிற்சாலையை நீண்ட காலமாக நிர்வாகம் செய்து வருகிறது. அவரது தாத்தா, தந்தை என அனைவரும் ஸ்டீல் அதிபர்கள் ஆவார், சவுரவ் கங்குலி கிரிக்கெட் பக்கம் திரும்பினாலும் தொடர்ந்து வர்த்தகத்தில் கண் வைத்திருந்தார். தற்போது சவுரவ் கங்குலி குடும்பம் மேற்கு வங்காள பகுதியில் மூன்று ஸ்டீல் தொழிற்சாலையை வைத்துள்ளது.
கிரிக்கெட், பிராண்ட் அம்பாசிட்டர், ஸ்டீல் தொழிற்சாலை, தற்போது ஆடை பிராண்ட் என பன்முக வர்த்தகத்தை சவுரவ் கங்குலி கொண்டுள்ளார். ஆயினும் சச்சினின் 1250 கோடி ரூபாய் சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் சவுரவ் கங்குலி 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை மட்டுமே வைத்துள்ளார்.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதி போட்டி: கோப்பையுடன் சேர்த்து இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications