தென்கொரியாவின் தனியுரிமை கண்காணிப்பு நிறுவனம், மெட்டாவிற்கு 21.6 பில்லியன் வோன் அபராதம் விதித்துள்ளது. அதாவது இந்திய மதிப்புக்கு தோரயமாக 127.5 கோடி. இந்த அபராதம், மெட்டா நிறுவனம் தென்கொரியாவில் உள்ள பேஸ்புக் பயனர்களின் சென்சிட்டிவ் தகவல்களை அங்கீகாரமின்றி சேகரித்து விநியோகித்ததற்காக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் தென்கோரிய அரசு மெட்டாவுக்கு விதித்த தொடர்ச்சியான அபராதங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட தகவல்களை மெட்டா நிறுவனம் எப்படி கையாள்கிறது என்பதை தென்கொரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
தொடர் விசாரணை: 4 வருட தொடர் விசாரணைக்கு பிறகு தென்கொரியாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் (PIPC) சுமார் 980,000 பேஸ்புக் பயனர்களிடமிருந்து முக்கியமான தகவல்களை மெட்டா நிறுவனம் சட்டவிரோதமாக சேகரித்ததை கண்டுபிடித்துள்ளது.

சேகரிக்கப்பட்ட தரவுகளில் பயணர்களின் மதம், அரசியல் சார்ந்த பார்வைகள், ஒரே பாலின உறவுகள் பற்றிய தகவல்களும் அடங்கும். ஜூலை மாதம் 2018-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் அங்கீகரிக்கப்படாத டேட்டா சேகரிப்பு நடந்ததாக தகவல் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
வினியோகிக்கப்பட்ட பயனர்களின் டேட்டா: மெட்டா நிறுவனம் சேகரிக்கப்பட்ட டேட்டாவை கிட்டத்தட்ட 4000 விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து உள்ளதையும் PIPC கண்டுபிடித்துள்ளது. தென்கொரியாவின் தனி உரிமைச் சட்டம் தனிப்பட்ட நம்பிக்கைகள், அரசியல் பார்வைகள் மற்றும் பாலியல் நடத்தை தொடர்பான தகவல்களை கண்டிப்பாக பாதுகாப்பதாகும். இதை மீறி இது போன்ற தகவல்களை மெட்டா நிறுவனம் பகிர்ந்துள்ளது.
தென் கொரியாவில் உள்ள சட்டம் ஒரு தனிநபரின் வெளிப்படையான அனுமதியின்றி எந்த நிறுவனங்களும் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தக் கூடாது என்பதுதான். ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் விரும்பிய பக்கங்களுக்கு செல்வதற்காக கிளிக் செய்த விளம்பரங்களை ஆய்வு செய்து மெட்டா நிறுவனம் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளது என்று PIPC தெரிவித்துள்ளது.
மேலும் தனிப்பட்ட நபர்களின் மதம் போன்ற விவரங்களை பயன்படுத்தி விளம்பரங்களை வகைப்படுத்தவும், பயனர்களின் ஆர்வம் என்ன? என்பதை கண்டுபிடிக்கவும் மெட்டா நிறுவனம் இந்த தகவல்களை பயன்படுத்தியதையும் PIPC கண்டுபிடித்துள்ளது.
PIPC-யின் இயக்குனரான லீ யூன் ஜங், மெட்டா நிறுவனம் இந்த முக்கியமான தகவல்களை சேகரித்து தனிப்பட்ட விஷயத்திற்காக பயன்படுத்தியுள்ளது. ஆனால் அவர்களுடைய டேட்டா பாலிசியில் இது குறித்த விவரங்களை தெளிவற்ற முறையில் கொடுத்துள்ளது மற்றும் அதற்கான ஒப்புதலை பெறவில்லை என்றும் லீ கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications