சென்னை: தென்கொரியாவை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனமான ஹெச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்களுடைய கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தென்கொரியாவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கு நீண்ட காலமாகவே திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் எந்த பகுதிகளில் எல்லாம் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கு சாதகமான இடங்கள் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கான வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
தற்போதைக்கு இந்தியாவில் எல்&டி நிறுவனம் தான் காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல்களை கட்டமைப்பது மற்றும் சீரமைப்பதற்கான நிலையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் முதல் கட்டமாக எல்&டி நிறுவனத்தோடு ஒரு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு முதல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வதேச அளவில் கப்பல் கட்டுமானத்தில் 10 சதவீத பங்கினை ஹுண்டாய் நிறுவனம் தான் வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளது. தமிழ்நாடு தவிர ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போதைக்கு இந்தியாவில் கப்பல் கட்டும் நிலையங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கிறது. சர்வதேச அளவில் இந்த கப்பல் கட்டும் பிரிவில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான் இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த நிலையை மாற்ற வேண்டுமென அரசு திட்டமிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மத்திய துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் தென்கொரியாவிற்கு சென்று அங்கே இயங்கி வரக்கூடிய கப்பல் கட்டுமான நிறுவனங்களை சந்தித்து இந்தியாவில் நிலையத்தை அமைக்க அழைப்பு விடுத்தனர்.
சர்வதேச அளவில் தற்போது சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு நாடுகளும் கடுமையான விதிமுறைகளை வகுத்திருக்கின்றன. இதனால் கப்பல் வழியே சரக்கு போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications