இந்தியாவில் ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) நிறுவனம், தனது அரட்டை செயலி மூலம் சமூக வலைதளங்களில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இந்த செயலி, உலகளாவிய மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த அரட்டை செயலியை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார்.
மற்ற செயலிகளில் இல்லாத, பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பல அம்சங்கள் அரட்டை செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வருங்காலத்தில் வாட்ஸ்அப் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இது ஒரு கடுமையான சவால் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வணிகச் செயலிகள் மற்றும் மென்பொருள் தொகுப்புகளை வழங்கி, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய தொழில்நுட்ப துறையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற சேவை சார்ந்த நிறுவனங்களாக இல்லாமல் கூகுள், மைக்ரோசாஃப்ட் போல தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களில் ஸோஹோ ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
இந்நிலையில் தான், ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தனது பயனர்களின் ரகசிய தகவல்களை அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருந்து எந்த அளவுக்குப் பாதுகாக்க முடியும் என்ற கேள்விக்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.
The Secret Rebel Case குறித்து பேசிய அவர், எந்தவொரு நிறுவனமும் தங்கள் பயனர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செய்யும் சதித்திட்டங்களை பாதுகாக்க முடியும் என்று உறுதியளிப்பது தவறான வாக்குறுதி. ஒரு நாட்டில் செயல்படும்போது, எளிமையான நிறுவனங்களை விட, சுதந்திரமான இறையாண்மை அதிகாரம் எப்போதும் மேலோங்கி நிற்கும்.
எனவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் நிச்சயம் கட்டுப்பட வேண்டும். கூகுள் இந்தியாவில் செயல்படும்போது இந்திய சட்டங்களுக்கும், ஆப்பிள் சீனாவில் செயல்படும்போது சீன சட்டங்களுக்கும் கட்டுப்படுவது போல, ஜோஹோ எந்த நாட்டில் இயங்குகிறதோ அந்த நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சட்டரீதியான பாதுகாப்புக்கு வரம்புகள் இருந்தாலும், ஜோஹோ தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பை வழங்குவதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது. இந்நிறுவனம் பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. எனவே, சட்டரீதியாக அரசாங்கமே கேட்டாலும், அந்த தரவை படிக்க முடியாதவாறு செய்யலாம். இது சட்டரீதியான பாதுகாப்பை வழங்காவிட்டாலும், தரவு மீறப்படுவதற்கான வாய்ப்புகளை தொழில்நுட்பரீதியாக குறைக்கிறது.
தற்போது இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மெசேஜிங் தளங்களில் இருந்து பயனர்கள் தங்கள் உரையாடல்களின் ரகசியத்தன்மை குறித்து அதிக கவலை கொண்டிருக்கின்றனர். ஆனால், ஜோஹோவில் அந்த பிரச்சனைகள் இருக்காது. ஜோஹோ நிச்சயம் அவர்களுக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications