ஐடி மற்றும் டிஜிட்டல் புரட்சியின் அசுர வளர்ச்சிக்கு மத்தியிலும், இந்திய அஞ்சல் துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு இன்றியமையாத தேவையாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, அஞ்சலகங்களில் வழங்கப்படும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சாமானிய மக்கள் இன்றும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், அஞ்சலக முதலீடுகள் அரசு உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீடு என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். தகவல் பரிமாற்றங்கள், ஸ்பீடு போஸ்ட் தபால் சேவை மட்டுமல்லாமல், சேமிப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள் என பல்வேறு அத்தியாவசிய சேவைகளை அஞ்சலகங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்த சூழலில் தான், இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பதிவுத் தபால் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, செப்.1ஆம் தேதி முதல் ஸ்பீடு போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பு காரணமாக ஸ்பீடு போஸ்ட் கட்டணங்கள் உயரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது.
இந்த கட்டண மாற்றம் அக்டோபர் 1அம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அஞ்சல் சேவையின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, உள்ளூர் சேவைக்கான ஸ்பீடு போஸ்ட் கட்டணம் 50 கிராம் வரை ரூ.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் முதல் 250 கிராம் வரையிலான பார்சல்களுக்கு ரூ.24-ம், 250 கிராம் முதல் 500 கிராம் வரையிலான பார்சல்களுக்கு ரூ.28 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தூர அடிப்படையிலான சேவைகளில், 50 கிராம் வரையிலான ஸ்பீடு போஸ்ட் கட்டணம் 200 கி.மீ மற்றும் 2,000 கி.மீ வரை ரூ.47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் முதல் 250 கிராம் வரையிலான பார்சல்களுக்கு, 200 கி.மீ வரம்புக்குள் ரூ.59-ம், 2,000 கி.மீட்டருக்கு மேல் ரூ.77 எனவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பொதுவான ஸ்பீடு போஸ்ட் கட்டணங்களும் ரூ.70 இல் இருந்து ரூ.93 வரை, மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது உள்ளூர் அஞ்சலக சேவை கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அஞ்சல் துறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி, ஸ்பீடு போஸ்ட் கட்டணங்களில் அவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல, மொத்தமாகப் பார்சல்களை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு 5% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோல், பதிவு தபால் சேவை நீக்கப்பட்டாலும், 'பதிவுச் சேவை' தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஸ்பீடு போஸ்ட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை மூலம் பார்சல்கள் அனுப்புனரின் முகவரிக்கு நேரடியாக கொண்டு சென்று டெலிவரி செய்யப்படும்.
மேலும், பார்சல் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓடிபி அடிப்படையிலான பாதுகாப்பான டெலிவரி, ஆன்லைன் கட்டண வசதி, டெலிவரி குறித்த எஸ்.எம்.எஸ். அறிவிப்புகள், டெலிவரி நிலை குறித்த தகவல்கள் போன்ற கூடுதல் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications