இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து குறைந்து வரும் நிலையில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களுக்கு, உள்நாட்டு விமானச் சேவையில் 80 சதவீதம் வரையில் பயணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள்
கடந்த 2 மாதங்களாக நாட்டின் போக்குவரத்து மற்றும் சேவைத் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் அதிகளவிலான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் தான் சாலை மற்றும் விமானப் போக்குவரத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசு கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
மத்திய அரசு விமானப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ள நிலையில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பங்குகள் இன்று தடாலடியாகச் சுமார் 11.86 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 91 ரூபாய் வரையில் உயர்ந்தது.
இண்டிகோ
இதேபோல் நாட்டின் பெருமளவிலான விமானப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோ இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 4.19 சதவீதம் வரையில் அதிகரித்து ஒரு பங்கு விலை 1,713.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை
இந்தியாவில் பிற துறைகளை விடவும் விமானப் போக்குவரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் நிலையில் மே 25ல் வெறும் 30000 உள்நாட்டுப் பயணிகள் மட்டுமே விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்திய நிலையில் நவம்பரில் சுமார் 2.52 லட்சமாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
IRCTC
போக்குவரத்து நிறுவனப் பங்குகள் உயர்ந்து வரும் நிலையில் ரயில்வே போக்குவரத்து நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனப் பங்குகளும் இன்று அதிகப்படியாக 15 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஐஆர்சிடிசி பங்குகள் இன்று அதிகப்படியாக 1,597 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications