போயிங் 737 MAX ரக விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அமெரிக்க மத்திய விமானத்துறை நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
20 மாத மறுஆய்வுக்குப் பிறகு இந்த புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதன் பிறகு சுமார் 5 மாதங்கள் கழித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. அவை இரண்டும் போயிங் 737 Max ரக விமானங்கள் தான். அந்த இரு விபத்துகளினால் 346 பேர் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு மார்ச் மாதம் அந்த ரக விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தற்போது, அந்த போயிங் நிறுவனத்திற்கு அந்த ரக விமானங்களுக்கான முக்கிய மென்பொருளையும், கணினிகளையும் மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும் மென்பொருள் பயிற்சி மற்றும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பது உறுதியான பின்னரே, அந்த ரக விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும். இது வணிக விமான வரலாற்றில் மிக நீண்ட ஒரு திட்டமாகும்.
ஆனால் விமானத்தின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் ஆராயப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரியுள்ளனர். இதற்கிடையே நிர்வாகத்தின் முடிவு குறித்து விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. அந்த ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்பது அவர்களின் வாதம்.
சரி இதற்கும் ஸ்பைஸ்ஜெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? ஸ்பைஸ்ஜெட் அதன் பட்டியலில் 13 விமானங்களை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் தடைக்கு பிறகு 2019 முதல் தரையிறக்கப்பட்டன. இந்த நிலையில் புதன்கிழமையிலிருந்து இந்த பங்கு விகிதம் 28.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நவம்பர் 17 தேதியிட்ட உலகளாவிய தரகு நிறுவனமான ஹெச்எஸ்பிசி, ஸ்பைஸ்ஜெட்டை குறைத்தல் என்பதில் இருந்து, வாங்க என்றும் மேம்படுத்தியுள்ளது. அதன் இலக்கு விலையை 26.50 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாக உயர்த்தியது. ஏனெனில் இந்த பட்ஜெட் விமானத்தின் நெருக்கடிகள் குறைந்துவிட்டது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் இந்த நிறுவனத்தின் போயிங் ரக விமானம் செயல்பாட்டினை மீண்டும் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவன பங்கின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications