வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 என்பது முடிந்து விட்ட நிலையில் இன்னும் தங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் 16 தரவில்லை என்றும் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த மாத சம்பளமும் எங்களுக்கு வரவில்லை என்று அவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் அதனால்தான் ஒரு சிலருக்கு இன்னும் சம்பளம் கூட போடவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் சிலருக்கு இன்னும் ஜூலை மாத சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சம்பளம் தரப்படும் என்று கூறியுள்ளது. இன்னும் 45% ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடன் சிக்கல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், அதனால் தான் தனது 45 சதவீத ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஊழியர்களின் சம்பளத்தில் வரி பிடித்தம் (டிடிஎஸ்) செலுத்துவதற்கான காலக்கெடுவையும் அந்நிறுவனம் தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஊழியர்களின் சம்பளம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் 30 ஆம் தேதி சம்பளம் சரியாக தரும் ஒரு நிறுவனமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த மாதம் கேபின் குழு மற்றும் விமானிகள் முதல் பொறியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறைகள் வரை இன்னும் சம்பளத்தைப் பெறவில்லை. இதுகுறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியபோது, 'ஜூலை 30 முதல் சம்பளம் வரவு வைக்கப்பட்டு வருகிறது என்றும், இதுவரை 55 சதவீத ஊழியர்களின் சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற ஊழியர்களின் சம்பளம் காலதாமதம் ஆனதாகவும் தெரிவித்தார்.
படிவம் 16
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் படிவம் 16 ஐ இன்னும் தராததால், தங்களால் வரி செலுத்த முடியவில்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் கூறியுள்ளனர். தற்போது வரி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் இனி அபராதத்துடன் தான் தாங்கள் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும் ஊழியர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
டிடிஎஸ்
அதுமட்டுமின்றி, ஊழியர்களின் சார்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்னும் டிடிஎஸ் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம், 95 சதவீத ஊழியர்களுக்கான டிடிஎஸ் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் டெபாசிட் செய்யப்படும் என்றும், மீதமுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications