இந்திய விமான போக்குவரத்து சேவையில் மாஸ்காட்டி வந்த ஸ்பைஸ்ஜெட் கொரோனா தொற்று பிரச்சனைக்குப் பின்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் வேளையில் 2026 ஆம் ஆண்டுக்குள் 100 விமானங்களைக் கொண்ட பெரும் நிறுவனமாக மாறும் என அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் ஸ்பைஸ்ஜெட், ஊழியர்களுக்கான சம்பளம், விமான நிலையத்தில் நிலுவைத் தொகை, புதிய விமானங்களுக்கான குத்தகை தொகை ஆகியவற்றுக்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட நிறுவனத்தின் பங்குகள் விற்பனை மூலம் சுமார் ரூ.3000 கோடி நிதியைத் திரட்டியது, இதை தொடர்ந்து தான் அஜய் சிங் 100 விமானங்கள் கொண்ட நிறுவனமாக மாறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

"ஸ்பைஸ்ஜெட் வலுவான அடித்தளம் கொண்ட விமானச் சேவை நிறுவனம். ஆனால் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உலகளாவிய ரீதியாகத் தடை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதும் எங்களுடைய வளர்ச்சியைப் பாதித்தன," என்று அஜய் சிங் கூறினார்.
"ஆனால் 100 விமானங்களைக் கொண்ட பெரும் நிறுவனமாக மாற தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் எங்களிடம் தயாராக உள்ளன. விமான நிலையத்தில் பார்க்கிங் இடங்கள், சர்வதேச விமான போக்குவரத்து உரிமைகள், விமானிகள் மற்றும் கேபின் க்ரூ, விமான பராமரிப்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றை நாங்கள் கொண்டுள்ளோம்" என்றும் அஜய் சிங் மிகவும் நம்பிக்கை உடன் கூறினார்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக, இந்த சந்தையில் பயணிகளுக்கு விமான சேவை அளிக்க போதுமான விமானங்கள் இல்லாத போது, எங்களிடம் 30 விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அஜய் சிங் ஸ்பைஸ்ஜெட் வலிமை குறித்துக் கூறினார்.
ஸ்பைஸ்ஜெட் சனிக்கிழமை தகுதிவாய்ந்த நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களுக்கு (QIP) வெற்றிகரமாக 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து நிதியை திரட்டியுள்ளது. இந்த முதலீட்டு சுற்றில் டாடா மியூச்சுவல் பண்ட், டிஸ்கவரி குளோபல் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் போன்ற பல முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த பங்கு விற்பனைக்கு பின்பும் அஜ்ய் சிங் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் சுமார் 35% பங்குகளை வைத்துள்ளார். ஸ்பைஜெட்-ன் அதிரடி கம்பேக் இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறைக்கும் முக்கியமானது.
இந்திய விமான போக்குவரத்து சந்தையில் தற்போது இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குரூப் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் தனது விமான எண்ணிக்கையை அதிகரிப்பது மூலம் கூடுதல் சந்தை பங்கீட்டை பெறும். ஆகஸ்ட் மாத இறுதியில், ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் 2%க்கும் குறைவான பங்கை கொண்டிருந்தது. 2021 இல் இது 10.5% ஆக இருந்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications